அந்தச் சலவைத்துறையில்
வெளுப்புக்கு வந்தன
சில அழுக்குச்சட்டைகள்
மதக்கறை பட்ட
அழுக்குச்சட்டைகள்
அவைகளில்
யார் சுத்தமென்று...?
காவிச் சட்டைகளும்
பச்சை சட்டைகளும்
பயங்கரச் சண்டைப்போட்டு
இரண்டுமே கிழிந்துபோயின
இடையில் நாட்டமை செய்த
வெள்ளைச்சட்டையோ
இருவரையும் தூண்டிவிட்டு...
கலவரத்தை கலோபரமாக்கியது
எட்டி நின்று இவர்களை
வேடிக்கைப் பார்த்தது
காக்கிச்சட்டை...
கலவரத்தின் நிறம் என்ன...?
புரிந்தும் புரியாமலும்
குழப்பத்தில் கருப்புச்சட்டை...
மிக பலமிக்க யானையை அங்குசத்தால் அடக்கிவிடுகிறான் மனிதன் ஆனால் அதே யானைக்கு மதம் பிடித்தால் அது பாகன் என்றுகூட பார்ப்பதில்லை
..............................................பரிதி.முத்துராசன்
**********************************************************************************
இப்பதுக்கு வருகின்ற கருத்துக்களும் விளக்கங்களும்........
1............மோனம் விட்டெழுந்த முத்துராசா!-மத
மான பொருளேடுத்தது என்ன ராசா?
ஈனப் பொருள்களையச் சாக்கடையுள்-இங்கே
இருவர் இறங்கிவிட்டால் என்ன ராசா?
கூனப் பிரதிநிதி, முத்துராசா! -கூடக்
குழப்பிக் கொடுத்தாலென் சின்னராசா?
ஆனைபெயரெடுத்த தேன்ராசா? -அந்த
அப்பிராணி சத்தியத்துக்கு அடங்கும்,ராசா!
நனறாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகிறேன்
................எழுத்து.நண்பர்-காளியப்பன் எசக்கியேல்
(என் பதில்-நன்றி அய்யா...உமது கருத்தும் எனது கவிதைபோல் குழப்பமாக உள்ளது ஆயினும் இங்கு எல்லாச் சட்டைக்களுமே அழுக்குத்தான் என்பதை உணர்த்தவே இது கருப்புச்சட்டையும் விதிவிலக்கல்ல சலவைக்கு வந்த அழுக்குச்சட்டைகளில் அதுவும் ஓன்று )
2...............நடப்பினை நயமாக சொன்ன விதம் அழகு அய்யா. இங்கு மதங்களை தூண்டி விட்டு மதவாதம் செய்வோரே அதிகம். அண்ணன் தம்பியாய்,மாமன் மச்சானை பழகுவோரிடம் பங்காளி சண்டையை மூட்டி பனிகாய்கிறது ..
............................எழுத்து.நண்பர் -ஈஸ்வர் தனிக்காட்டு ராஜா
(என் பதில்-நன்றி நண்பரே....இங்கு எல்லாச் சட்டைக்களுமே அழுக்குத்தான் என்பதை உணர்த்தவே இது கருப்புச்சட்டையும் விதிவிலக்கல்ல )
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |