அம்மாவை
ஆத்தா என்பான்
அதாவது பரவாயில்லை
ஆ..வுக்குப் பதில்
ஓ...போடுகிறான்
இவனும் தமிழனாம்?
ஏன்...ஏன் இப்படி?
என்று வினாவினால்...
அய்யம் சாரி...
ஆத்திரத்தில் அப்படி பேசியதாக
ஆங்கிலத்தில் தடுமாறுகிறான்
சென்னை ஜென்டில்மேன்...?
(சென்னைக்கு நான் வந்து முப்பது வருடங்கள் ஆனது. வீட்டை விட்டு வெளியே வந்தால் அதும் தெருமுனை தேநீர்கடைகள் ஆட்டோ வாகன நிறுத்தங்கள் இன்னும் சில 'ஏரியாக்கள்' நுழைந்துவிட்டால் இந்த வார்த்தை தினமும் குறைந்தது பத்து தடவை காதில் விழாத நாள் இல்லை)
.................பரிதி.முத்துராசன்
*****************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து...?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |