பாலியல் வன்கொடுமைக்குச் சினிமாவில் வரும் விரசமான காதல் காட்சிகள் முத்தகாட்சிகள் குத்துப்பாடல்கள் முக்கியக் காரணங்கள்
அதிலும்ஆண்-பெண் நடிகர்கள் தங்கள் அங்கங்களைக் குலுக்கி-தலுக்கி ஆடும் குத்துப்பாட்டுகள் அசிங்கத்தின் உச்சங்கள்
ஆடும்போது அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் உணர்ச்சியைத் தூண்டும் விரசங்கள்
தமிழ் படங்களிலும் இந்தக் குத்துப்பாட்டு மோகம்
பணதிற்காகவும் படம் வெற்றிப்பெறவும் செமகுத்துப் போடுகிறது.
இந்தக் குத்துப்பாட்டு நடனங்கள் அதீத கவர்ச்சியுடன் கும்மாங்குத்துடேன் வெள்ளித்திரையில்...
அதுவே சிலநாட்களில் வீட்டுக்குள் நுழைகிறது அலையாத விருந்தாளிகளாகத் தொலைக்காட்சியில்....
அன்றைய சினிமாக்களிலும் இந்தக் குத்துப்பாடல்கள் இருந்தன அவைகள் வார்த்தைகளில் விரசமின்றிக் காண்பதற்கும் கேட்பதற்கும் காம உணர்வைத் தூண்டாமல்..
இதோ பழைய படம் ஒன்றில் வரும் மாமா..மாமா...குத்துப்பாட்டு
thanks-YouTube-Wilfred Fernandez
இன்றோ குத்துப்பாட்டு வரிகளில் ஒளிந்திருக்கும் வார்த்தைகளின் அர்த்தங்கள் நரசமானவை
இதோ இன்றைய திரைப்படங்களில் வரும் ஒரு குத்துப்பாட்டு ...
தூத்துக்குடி பெண்ணைப் பற்றிக் கதை சொல்லும் குத்து....
இதை எழுதிய கவிஞன்...? தூத்துக்குடி பக்கம் போனது இல்லையோ...?
அவள் உண்மையிலேயே தூத்துக்குடி பெண் என்றால் ....
நறுக்கிப்புடுவாள் நறுக்கி...!
thanks-YouTube-by ayngaran
முதலில் சமுதாய அக்கறை உடையவர்களாகக் கவிஞர்கள் மாறவேண்டும் காசுக்காக எதையும் எழுதும் பிழைப்பு ஒரு பிழைப்பா..?
காதல் காட்சிகள்- முத்தகாட்சிகள்- குத்துப்பாடல்கள்-இவைகளைத்
தடை செய்தால் சமுதாயம் சீர்படுமா...? பாலியல் வன்கொடுமைகள் குறையுமா...?
...............................பரிதி.முத்துராசன்
சினிமாவில் வரும் இவைகளில் எது பாலியல் வன்கொடுமைக்குக் காரணம்...?
முடிவு தேதி-27/01/2013
சமுதாய அக்கரையுடன் வாக்களித்த அனைவருக்கும் நன்றி
******************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.....?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |