google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: திரிஷா பேச்சு! திரிஞ்சுப் போச்சு!

Sunday, January 27, 2013

திரிஷா பேச்சு! திரிஞ்சுப் போச்சு!




ஏண்டா..அறிவுச்செல்வா!
அன்னைக்கு அழியாத உலகம்
குடிப்பது அவரவர் விருப்பமுனு 

திரிஷா பேசினாக்க அழிஞ்சமாதிரி  
அம்புட்டுபேரும் குதிக்கிறாங்க....

ஊடகக்காரங்க இருக்கிறாங்களே
உலகிலேயே மோசமானவங்கடா  
அப்படித்தாண்டா டயானாவை
அம்புட்டுபேரும் விரட்டி துரத்தி
கொன்னுட்டாங்கடா....

இப்படித்தாண்டா குஸ்பும்
கற்பு பற்றி ஏதோ சொல்ல....
தமிழ் கலாச்சாரமே அழிஞ்சதா
தைய தக்கான்னு குதிச்சவங்க
கருப்புகொடியோட அலைஞ்சாங்க....



 





















thanks-img-southdreamz.com




அப்படி என்னத்தடா
தப்பா சொல்லிச்சு திரிஷா..
அவிங்க கேட்ட கேள்விக்கு
பதில் சொல்லிச்சு....
அது தப்பாடா.....?
இதுக்கு ஒரு விவாத மேடை

அந்தக் காலத்தில பெண்களை
அடிமையாய் அடைச்சி வச்சாங்கடா...
அப்புறம் பெண்கள் எழுச்சி கொண்டாங்க.....
அப்ப ஆணும் பெண்ணும் சமம்னு சொன்னாங்க
இப்ப ஆணைவிடப் பெண் மேலுன்னு சொல்றாங்க
இதுல என்னடா தப்பு இருக்கு.....?

நம்ம பூக்காரி கிழவிக்கு
தண்ணி போட்டாத்தான்
கை நடுங்காம பூ கட்ட வரும்
அப்புறம் அவ மகா அடிச்சா
இப்போ அவ பேத்தி அடிக்கிறா
இது கீழ் மட்டத்தில நடக்கிறது  
மேல் மட்டத்தில கொஞ்சம் டீசண்டா...
அதுக்குனே இருக்கு நட்சத்திர ஓட்டல்கள்

ஏண்டா...நாட்டுல பிரச்சனை
எவ்வளவோ இருக்கு
கர்நாடகா தண்ணி தரமாட்டேங்குது
அதை விட்டுட்டாங்க
திரிஷா தண்ணியடிக்க தூண்டினானு 
தடிஎடுத்துக்கிட்டு  வருகிறாங்க...




(அண்ணேன்.....
முந்தியெல்லாம் நீங்க பேசுறதப் பார்த்தா
நீங்கதான் கீழ்பாக்கம் போகனும்போல் தெரியும்
இப்பெல்லாம்  நீங்க பேசுறதைக் கேட்டா
நான்தான் கீழ்பாக்கம் போகனும்போல் இருக்கு!)  

*****************************************************************************
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1