google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அடேய்..தமிழா! இனி நீ பாலாவின் பரதேசி போல்தான்!

Monday, February 11, 2013

அடேய்..தமிழா! இனி நீ பாலாவின் பரதேசி போல்தான்!



பக்கத்து நாட்டு
பிணம் தின்னிக் கழுகு ஓன்று...
இங்கே வந்து பறக்கிறது
இப்போதெல்லாம்....
கடவுளைப் பார்க்க வருவதாக
கதை சொல்லித் திரிகிறது    



அது வரும் போதெல்லாம்
இங்கே இருக்கும்
வட நாட்டுக் கழுதைகள்
பல்லக்கு தூக்கிகளாய்...
அதன் பாதையெங்கும் 
 சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன






தமிழ்நாட்டுக் கோழிகள் 
கருப்பு முட்டை போட்டுவிட்டு 
கண்டனம் செய்கின்றன 
அத்தோடு முடிஞ்சுபோச்சு 
அத்தனையும் கூமுட்டைகள் 




அந்தப் பருந்தோ
இந்திய எதிரிகளை
சொந்தம் கொண்டாடுது...
சீனாவுடன் சிநேகிதம்
பாக்கிஸ்தானுக்குப் பங்காளி

இப்படியே போனால்
அதுவும் இங்கே 
ராஜாங்கம் பண்ணும்...
என் தாத்தா-பாட்டி
இந்தியர்கள் என்று சொல்லும்?

இந்திய தேர்தலில் அதுவும் நிற்கும்
இந்திய பிரதமர் ஆனாலும் ஆகும்


அடேய்..தமிழா!
இனி நீ பாலாவின்
பரதேசி போல்தான்!




...............................பரிதி.முத்துராசன் 

****************************************************************************
சில கண்டனக்கீச்சுக்கள்.............

அதான் எதிர்ப்பு தெரிவிக்குராங்கன்னு தெரியுதுல்ல.. அப்புறம் எதுக்கு இந்த வெண்ணை வரான் இங்க? #ராஜபக்சே

ராஜபக்சே இந்தியா வருகைக்கு பாஜகவினரே பொறுப்பேற்க வேண்டும்-ஜிகே வாசன்# பழி போடுறதுல சின்னப் பசங்கள மிஞ்சிருவிங்க போல பாஸ்!

ராஜபக்சேவை தடுத்த நிறுத்த ரயில் மறியல் போராட்டம்: வேல்முருகன்#அட ஞானசூன்யங்களா, ராஜபக்‌சே ரயில்ல வரல, விமானத்துல வர்றாரு!


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1