பக்கத்து நாட்டு
பிணம் தின்னிக் கழுகு ஓன்று...
இங்கே வந்து பறக்கிறது
இப்போதெல்லாம்....
கடவுளைப் பார்க்க வருவதாக
கதை சொல்லித் திரிகிறது
அது வரும் போதெல்லாம்
இங்கே இருக்கும்
வட நாட்டுக் கழுதைகள்
பல்லக்கு தூக்கிகளாய்...
அதன் பாதையெங்கும்
சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன
தமிழ்நாட்டுக் கோழிகள்
கருப்பு முட்டை போட்டுவிட்டு
கண்டனம் செய்கின்றன
அத்தோடு முடிஞ்சுபோச்சு
அத்தனையும் கூமுட்டைகள்
அந்தப் பருந்தோ
இந்திய எதிரிகளை
சொந்தம் கொண்டாடுது...
சீனாவுடன் சிநேகிதம்
பாக்கிஸ்தானுக்குப் பங்காளி
இப்படியே போனால்
அதுவும் இங்கே
ராஜாங்கம் பண்ணும்...
என் தாத்தா-பாட்டி
இந்தியர்கள் என்று சொல்லும்?
இந்திய தேர்தலில் அதுவும் நிற்கும்
இந்திய பிரதமர் ஆனாலும் ஆகும்
அடேய்..தமிழா!
இனி நீ பாலாவின்
பரதேசி போல்தான்!
...............................பரிதி.முத்துராசன்
****************************************************************************
சில கண்டனக்கீச்சுக்கள்.............
அதான் எதிர்ப்பு தெரிவிக்குராங்கன்னு தெரியுதுல்ல.. அப்புறம் எதுக்கு இந்த வெண்ணை வரான் இங்க? #ராஜபக்சே
ராஜபக்சே இந்தியா வருகைக்கு பாஜகவினரே பொறுப்பேற்க வேண்டும்-ஜிகே வாசன்# பழி போடுறதுல சின்னப் பசங்கள மிஞ்சிருவிங்க போல பாஸ்!
ராஜபக்சேவை தடுத்த நிறுத்த ரயில் மறியல் போராட்டம்: வேல்முருகன்#அட ஞானசூன்யங்களா, ராஜபக்சே ரயில்ல வரல, விமானத்துல வர்றாரு!
தமிழக தலைவர்கள் அனைவரும்
ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்று தர உறுதி ஏற்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
அறிக்கை # நீங்க எதுவும் செய்ய மாட்டிங்க
சமாதானத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்:ராஜபக்சே #கண்ட கண்ட நாய் எல்லாம் அட்வைஸ் பன்னும்னு அப்போவே நினைச்சேன்
"கடவுளுக்கும் அரக்கனை நேரில் காணும் ஆசை வந்துவிட்டது.# ராஜபக்சே திருப்பதி விஜயம்!!"
****************************************************************************
எனது இப்பதிவுக்கு கருத்திட்ட எழுத்து தள நண்பர்களின் கருத்துக்களும் பதில்களும் ...........................
**********************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.............?
எனது இப்பதிவுக்கு கருத்திட்ட எழுத்து தள நண்பர்களின் கருத்துக்களும் பதில்களும் ...........................
hujja11-February-13 6:27 PM
எப்போதும் தீயோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு கலிகாலத்தில்.
அருமையான சாடல்!
அருமையான சாடல்!
பதில்...........
பரிதி.முத்துராசன் 12-February-13 2:19 PM
நன்றி தங்கள் கருத்துக்கு.......ஒருவருக்கு தீயவராக
தெரிபவர்கள் இன்னொருவருக்கு நல்லவராக தெரிகிறார்கள் ....இது எந்த காலம்
...............எதிர்காலமா?
s.m.aanand11-February-13 5:08 PM
அருமையாக சொன்னீர்கள் அய்யா! அவனடைய நாட்டில் தமிழர்களின்
கோவில்களை இடித்துப் புத்த விஹாரமாக்கியவனுக்கு
இந்தியக் கோயில்களில் மரியாதை என்ன வேண்டிக் கிடக்கிறது?
பல்லக்கு தூக்கும் பரதேசிகள் யோசிப்பார்களா?
கோவில்களை இடித்துப் புத்த விஹாரமாக்கியவனுக்கு
இந்தியக் கோயில்களில் மரியாதை என்ன வேண்டிக் கிடக்கிறது?
பல்லக்கு தூக்கும் பரதேசிகள் யோசிப்பார்களா?
பதில்..............
பரிதி.முத்துராசன் 12-February-13 2:23 PM
கருத்துக்கு நன்றி....நமது அரசியல்வாதிகள் அவர்கள்
மதசாற்பற்றவர்களாக பகுத்தறிவுவாதிகளாக இருந்தபோதிலும் மத பண்டிகைகாலங்களில்
அந்த ஒருநாள் மட்டும் வாக்குகளுக்காக மதவாதிகளாக மாறும்போது இவரை
குறைசொல்லி என்னபயன்?
**************************************************************************
*******************************************************************
**************************************************************************
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா12-February-13 2:29 PM
சாட்டையடி வரிகள் , அய்யா...
உண்மை என்னவெனில் நமக்குள் ஒற்றுமை இல்லை , ஒவ்வொருவரும் மதம் மற்றும் அரசியல் வாரியாக பிரிந்து கிடக்கிறார்கள் இவர்கள் எதற்கும் ஒன்றுகூடி ஒற்றுமையாய் குரல் எழுப்ப மாட்டார்கள்..
பதில்........
உண்மை என்னவெனில் நமக்குள் ஒற்றுமை இல்லை , ஒவ்வொருவரும் மதம் மற்றும் அரசியல் வாரியாக பிரிந்து கிடக்கிறார்கள் இவர்கள் எதற்கும் ஒன்றுகூடி ஒற்றுமையாய் குரல் எழுப்ப மாட்டார்கள்..
பதில்........
பரிதி.முத்துராசன் 12-February-13 2:35 PM
கருத்துக்கு நன்றி நண்பரே!..வேற்றுமையில் ஒற்றுமை என்பது
இந்திய மந்திரம் அது இறந்த காலம் .........மனித ஒற்றுமையில் மத வேற்றுமை
என்பது இன்றைய மந்திரம்.......இது நிகழ்காலம் *******************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |