google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பச்சிளம் பாலகனே பாலச்சந்திரா!

Wednesday, February 20, 2013

பச்சிளம் பாலகனே பாலச்சந்திரா!


பச்சிளம் பாலகனே பாலச்சந்திரா!
வீரம் விதைத்த வித்தே!
நீ முளையிடும் போதே
மூடர்களால்....
கிள்ளி எறியப்பட்டாய்...!

நீ வளரும் முன்னரே
வீணர்களால் 
சுட்டு  வீழ்த்தப்பட்டாய்...!


உன் தந்தையின் மரணம்
தந்த வலியைவிட...
உன்  மரணத்தின்
நிழற்படம் தருதே   
அதீத வலி...........















அதில் தெரியுதே...
பாலகனே! பாலச்சந்திரா!
உன் மரணத்தில் கூட 
அப்......பாவிகளால்
அழிக்க முடியாத....

பால்வடியும் 
உன் அப்பாவி முகம்...
வீரத்தின் வடிவாய்
உன் அப்பாவின் முகம்

என்றோ நீ இறந்தாலும்
எங்கேயோ நீ இறந்தாலும்
இன்று உன் இறப்பு  




இவ்வுலகில் எங்கேயோ இருக்கும் 
இதயம் உள்ளோரெல்லாம்
இரத்தக் கண்ணீர் சிந்த வைக்குதே!
மனிதநேயம் மாய்ந்ததே...! என்று.

உன் மரணம்
இன்னொரு யுகபுரட்சிக்கு
விதையாக விழுந்துள்ளது 

இன்னும் மனித நேயம்
மாயவில்லை  எனில்...
உன் மரணம் 
ஒரு மாற்றம் தரும்..
அந்த அசிங்களர்களுக்கு 
அழிவு தரும்...முடிவு கட்டும்    

இங்கே இந்த அசிங்கனுக்கு 
சிவப்பு கம்பளம் விரிக்கும் 
அவலம் இனியும் தொடருமெனில்...
அதைவிட அசிங்கம் இல்லவே இல்லை!

இனியும் இந்த அசிங்கத்தின் நாடகத்தை 
ஐ.நா.சபையும்  வேடிக்கைப் பார்த்தால்...
 அதைவிட அசிங்கம் இல்லவே இல்லை!   

                                              ....................பரிதி.முத்துராசன்  
     
 
                                          thanks-YouTube-walk4justice

******************************************************************************
நம்ம டுவீட்டர்களின் ஆவேச கீச்சுக்கள்....................


பாலச்சந்திரன் பாலகன் அவனை கொல்லாதே என்று சொல்லக்கூட உலகில் ஒருவனும் இல்லை.


பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொலை செய்தது மிகக்கொடூரமானது: முதல்வர் ஜெயலலிதா

பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் கொலைக்கு இலங்கை அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்: கருணாநிதி

22 வருசமா ஒரு கொலையைப் பற்றியே பேசி அரசியல் பண்ணும் தமிழக காங்கிரஸாரே, பாலச்சந்திரனின் படுகொலையை பார்த்தீர்களா? #KillingFields

RT @gowridash என் கண்களுக்கு பாலச்சந்திரன் கேவல படைகளால் வீர மரணம் எய்திய வீர அபிமன்யுவாக தெரிகிறான் :-( #killingfields


ஐ நா தீர்மானத்திற்கு பாலச்சந்திரன் கொலை வீடியோ முக்கிய சாட்சியாம். தலைவனின் இரத்தம் இன்னும் போராடிக் கொண்டே இருக்கிறது. #எழுவோம்


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1