google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இன்னொரு விதி செய்வோம்....?

Wednesday, February 13, 2013

இன்னொரு விதி செய்வோம்....?


இன்னொரு விதி செய்வோம்....?
இங்கே 
கயமை கொண்ட ஆண்மகன் 
கனவிலும் தவறு செய்ய...
எக்கணமும் தயங்கிட  வேண்டும்...!

இன்னொரு விதி செய்வோம்....?
பெண்டீரைக் காத்திட 
இன்னொரு விதி செய்வோம்....?
என்ன விதி என்போரே!

பாலியல் வன்கொடுமை 
செய்திடும் ஆண்மையை 
அப்படியே அறுத்தெறிவோம்...?




பிறந்ததும் பெண் சிசுவை 
அழிக்க நினைக்கும் அப்பன்களுக்கு 
இன்னொனொரு  முறை 
அப்பன் ஆகாத நிலை செய்வோம்...?


ஆசிட் வீசும் காதலனா..?
அவன் ஆண்குறியை
அமில கலவையில் மூழ்கடிப்போம்...?

அறியாத பெண் சிறுமிகளை 
அநியாயமாய்ச் சீரழிக்கும் 
வெறிகொண்ட மனித நாய்களை 
வெறிநாயால் கடிக்கவைத்து 
வேதனையை உணரச் செய்வோம்...?

என்னய்யா பரிதி...?
இங்கே பெண்கள் எவரும் 
தவறு செய்வதில்லையா?  
அவர்கள் யாரும் 
ஆபாசமாக அலையவில்லையா?
என்று கேட்போரே! நின்று கேளும்!



பெண்களைவிட ஆண்கள் 
உள்ளத்தாலும் உடலாலும் 
வலிமை கொண்டவர்கள் 
இயற்கையின் படைப்பில் 
இப்படி ஒரு வேற்றுமை 

அனைத்திலும் 
ஆளுமை செய்யும்
ஆண் பாலினமே!
அன்னை காட்டிய அன்பை 
அவள் இனத்துக்குக் காட்ட தயக்கமா?
 அதையும் மாற்றிட அன்பால் முடியாதா?  

(இதற்கு கருத்து......

நையாண்டி நைனா @meyrin1217
கவிதை அருமை!சாரம் கொடுமை! 
எனது பதில்.........
உண்மைதான் ..இந்த கொடுமையை கொடுமையான வார்த்தைகளில்தான் எழுதவேண்டும் 
நையாண்டி நைனா @meyrin1217
@PARITHITAMIL சரிதான்!சமூக அவலங்களை நெத்தியடியாக சொல்வதும்,மிகைப்படுத்தலும் தவறேஇல்லை!)


 ...........................பரிதி.முத்துராசன் 

************************************************************************
விநோதினிக்காக சில கீச்சர்களின் ஆதங்கமான ஆவேச கீச்சுக்கள்... 

வினோதினியின் கடைசி வார்த்தைகள் என் வலியை அவனும் அனுபவிக்கனும் அவன் மீதும் ஆசிட் அடிக்கனும்!#சட்டம் கடமையை செய்யாது,,காலம் செய்யும்தாயே!்

வினோதினி உயிர் இழந்ததற்குக் காரணமான அந்த ஆண் பண்ணிய தவறை மற்ற யாரும் பண்ணாது இருத்தலே அவள் உயிர் விட்டதற்கு அர்த்தம் சேர்க்கும்.
அந்த படுபாவிக்கு தூக்கு தண்டனையே கொடுத்தாலும் அது 5நிமிட வேதன தான், அவனுக்கு வினோதினி அனுபவித்த அதே வேதனையை அவனும் அனுபவிக்க வேண்டும்
நிகழாது இனி! என்று சொல்லும் வகையில் தண்டனை தர வேண்டும் #இறந்து விட்டாள் சகோதரி வினோதினி
ஒரு தாய்க்குப்பிறந்திருந்தால் அவனுக்கு மனம்வந்திருக்குமா,ஏதோ ஒரு நாய்க்குப்பிறந்ததனால்அல்லவா துணிந்தான் திராவகம்வீச #வினோதினி

இந்த முட்டாள்களின் கலாச்சாரம் தான் வினோதினியின் மரணத்திற்கான அடிப்படை காரணம்.



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1