(குறிப்பு-இந்த நகைச்சுவை பதிவு ஒரு உண்மைச்சம்பவத்தின் கற்பனையே ...யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல நீங்கள் புண்பட்டால் நான் பொறுப்பல்ல)
ஏண்டா....அறிவுச்செல்வா!
நானும் வில்லங்கமாக எழுதுகிறேன்
பழம் பெரும் தமிழ் புலவர்களை ம்...ம்...
கவிஞர்களையும்தான்
இலக்கியச் சோம்பேறிகள் என்று எழுதினேன்
எவரும் தடையும் போடவில்லை
வடையும் சுடவில்லை
ஒரு பிரபலமான கவிஞரையும்
பரதேசி கவிஞர் என்று திட்டினேன்
அதற்கும் யாரும் கோபப்படவில்லை
சினிமா மாயையில் கிடக்கும்
தமிழ் இனம் அறிவு இல்லாதது
என்றுகூட எழுதிவிட்டேனடா .....
அப்படியும் யாரும் சண்டைக்கு வரவில்லை
என்ன தமிழர்களடா இவர்கள்...
எங்கே நான் பிரபல பதிவர் ஆகிவிடுவேனோ
என்று பயந்துவிட்டார்களா?
எவரும் தடையும் போடவில்லை
வடையும் சுடவில்லை
விஸ்வரூபம் படத்துக்கு வந்ததுபோல்
இலக்கிய உலகத்தில் பெரிய சர்ச்சை வரும்
இலக்கிய வாதிகள் தடியெடுத்து வருவார்கள்
என்றெல்லாம் எதிர்பார்த்தேன்
யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லையடா...!
அட..இந்த மதவாதிகளையும் திட்டிப் பார்த்தேன்
எல்லோரும் சிரித்துக்கொண்டே
போடா..புண்ணாக்கு என்று
சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறார்கள்
என்னல்லாமோ கீச்சிப்பார்த்தேன்
கீச்சி கீச்சி தொண்டை வரண்டதுதானடா மிச்சம்
விக்ஸ் மிட்டாய் வாங்கித் தின்றதுதானடா நட்டம்
பவர் ஸ்டாருக்குகூட ஏழரை சனி போய்விட்டதடா
வேதாளம் மாதிரி என்முதுகில் ஏறிக்கொண்டதடா
இந்தத் தமிழ் உலகத்தை விட்டு வேறு உலகம்
இந்த இந்தியாவில் காஸ்மீரிலிருந்து...கேரளாவரை
தமிழ் தெரியாதவர்கள் இருக்கும் இடம் தேடுகிறேன் ...
எல்லா இடங்களிலும் தமிழர்கள் இருக்கிறார்களடா
தமிழர்கள் இல்லாத நாடே இல்லையா.....?
(அண்ணேன்.....
அவியிங்க பெரிய நடிகர் அண்ணேன்
உங்களுக்குப் பொய்யா எழுதத்தெரியல்லை
போய்....எதையாவது கிறுக்குங்க...அண்ணேன்
நாங்க சிரிச்சுக்கிட்டாவது இருக்கோம்
தமிழர்கள் இல்லாத இடம்
செவ்வாய் புதன் வியாழன் மாதிரி
வேறு கிரகத்தில்தான் இருக்கணும்
அடுத்து யாராவது ராக்கெட் அனுப்புனா
உள்ளே போய் ஒளிஞ்சிக்குங்க...அண்ணேன்)
.............................பரிதி.முத்துராசன்
thanks-YouTube-akilan naveenarasa
*****************************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |