(எச்சரிக்கை-அரசியல்வாதிகள்,அரசியல் கட்சி தொண்டர்கள் இப்பதிவைப் படிக்க வேண்டாம்.மீறி படித்தால் உங்கள் கட்சி விசுவாசம் குறையலாம்.மேலும், இது நகைச்சுவை பதிவு.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல...புண்பட்டால் நான் பொறுப்பல்ல)
ஏன்டா அறிவுச்செல்வா!
உனக்கு மண்டை குழம்பிப் போச்சாடா?
"தேர்தல் நிதி கேட்டுப் போகவேண்டும்
பெரிய உண்டியல் வாங்கி வாடா...."
என்று சொல்லி அனுப்பினால்......
பரதேசிப் பயலே....
பரதேசிகள் வைத்திருக்கும் திருவோட்டை
சுட்டுவிட்டு வந்திருக்கிறாயே...?
அறிவுகெட்டவனே....!
அயிந்து நூறு கொடுத்தேனே
அவைகளை என்ன செய்தாயடா....?
திருவோட்டோடு
தேர்தல் நிதி கேட்டுப் போனால்..
பிச்சைக்காரன் என்று எண்ணி
விலையில்லாத அரிசியில்
பொங்கிய சோற்றைத்தான்
அள்ளிப் போடுவார்களடா...
இப்படித்தான் போன தேர்தலில்
நிதிவசூல் செய்யவில்லை...
அத்தனை எதிகட்சிக்காரங்களுக்கும்
இளக்காரமாகப் போச்சு....
நாம் கோடி கோடியாக
கொட்டி வைத்திருக்கிறோம் என்று ...
புரளியைக் கிளப்பி விட்டு நம்மை
புறமுதுகிட்டு ஓடவைத்தார்கள்....
நாம் ரகசியமாய்க் கொடுத்த
துட்டையும் வாங்கிக்கொண்டு...
ஒட்டுப் போடாமல் வேட்டு வைத்தார்கள்
போன தேர்தலில் கொடுத்த காசை
இந்தத் தேர்தலில் திருப்பி வாங்கிடலாம்
என்று நினைத்திருந்தேன்.......
ஏன்டா.........பரதேசிப்பயலே!
இப்படித் திருவோடு வாங்கிவந்து.......
பரதேசி போல் என்னை
"அய்யா! தேர்தல்நிதி போடுங்கய்யா!"
கையேந்த வைத்துவிட்டாயடா!
(அண்ணேன்.....
நீங்க கொடுத்த ரூபாய்க்கு
திருப்பதி உண்டியலா கிடைக்கும்...?
இந்தத் தேர்தலிலாவது
எதுவும் இல்லாத ஏழையாக...
மக்களிடமே காசு கேட்டு
கையேந்திப் போனால்தான் .....
இரக்கப்பட்டு ஓட்டுப் போடுவாங்க... அண்ணேன்)
.........................பரிதி.முத்துராசன்
******************************************************************************
இது சும்மா கவர்ச்சீ...படம்
*********************************************************************
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....ஏன்டா அறிவுச்செல்வா!
உனக்கு மண்டை குழம்பிப் போச்சாடா?
"தேர்தல் நிதி கேட்டுப் போகவேண்டும்
பெரிய உண்டியல் வாங்கி வாடா...."
என்று சொல்லி அனுப்பினால்......
பரதேசிப் பயலே....
பரதேசிகள் வைத்திருக்கும் திருவோட்டை
சுட்டுவிட்டு வந்திருக்கிறாயே...?
அறிவுகெட்டவனே....!
அயிந்து நூறு கொடுத்தேனே
அவைகளை என்ன செய்தாயடா....?
திருவோட்டோடு
தேர்தல் நிதி கேட்டுப் போனால்..
பிச்சைக்காரன் என்று எண்ணி
விலையில்லாத அரிசியில்
பொங்கிய சோற்றைத்தான்
அள்ளிப் போடுவார்களடா...
இப்படித்தான் போன தேர்தலில்
நிதிவசூல் செய்யவில்லை...
அத்தனை எதிகட்சிக்காரங்களுக்கும்
இளக்காரமாகப் போச்சு....
நாம் கோடி கோடியாக
கொட்டி வைத்திருக்கிறோம் என்று ...
புரளியைக் கிளப்பி விட்டு நம்மை
புறமுதுகிட்டு ஓடவைத்தார்கள்....
நாம் ரகசியமாய்க் கொடுத்த
துட்டையும் வாங்கிக்கொண்டு...
ஒட்டுப் போடாமல் வேட்டு வைத்தார்கள்
போன தேர்தலில் கொடுத்த காசை
இந்தத் தேர்தலில் திருப்பி வாங்கிடலாம்
என்று நினைத்திருந்தேன்.......
ஏன்டா.........பரதேசிப்பயலே!
இப்படித் திருவோடு வாங்கிவந்து.......
பரதேசி போல் என்னை
"அய்யா! தேர்தல்நிதி போடுங்கய்யா!"
கையேந்த வைத்துவிட்டாயடா!
(அண்ணேன்.....
நீங்க கொடுத்த ரூபாய்க்கு
திருப்பதி உண்டியலா கிடைக்கும்...?
இந்தத் தேர்தலிலாவது
எதுவும் இல்லாத ஏழையாக...
மக்களிடமே காசு கேட்டு
கையேந்திப் போனால்தான் .....
இரக்கப்பட்டு ஓட்டுப் போடுவாங்க... அண்ணேன்)
.........................பரிதி.முத்துராசன்
******************************************************************************
இது சும்மா கவர்ச்சீ...படம்
*********************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |