விஸ்வரூபம்-வன்முறை காட்சிகள் நிறைந்தது என்று திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறதா?இல்லையேல் உண்மையில் அது கொடூரரூபமா?
ஆனால்
உலகநாயகனுக்கு எதிராக.....சதி நடக்கிறது
உலகநாயகனுக்கு எதிராக.....எரிகிறது வதந்தீ
தாய்மார்களை படம் பார்க்க விடக்கூடாது என்று
விஸ்வரூபம் ஒரு கொலைகாரப் படம் என்று
நாளை (7-ம் தேதி) விஸ்வரூபம் வெற்றிகரமாகத் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் பல தடைகளைக் கடந்து வெளிவருகிறது....
அதற்கு முன்பே அருகில் உள்ள கேரளா,ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களில் முன்பே வெளியானதால்.....
அதைப் பார்த்துவிட்டு எழுதுவதாகப் பலவித விமர்சனங்கள் வருகின்றன
அதில் சிலவைகளைப் படித்தால் கொலை நடுக்கம் வருகிறது நமக்கு....
அதிலும் சில பதிவர்கள் விமர்சனம் என்ற பெயரில் நிறைய வதந்திகள் உலவுகின்றன உலகநாயகன் ஏதோ மனிதர்களைக் வெட்டிகூறு போடும் கசாப்பு கடைக்காரர் போன்று படம் எடுத்து உள்ளதாக............
ஒருவர் எழுதுகிறார்----ஒரு அமெரிக்கரை கழுத்தை அறுக்கும் காட்சி இருக்கு என்று
இன்னொருவர் எழுதுகிறார்----ஒருவர் கை வெட்டுப்பட்டு துடித்துக்கொண்டுக் கிடக்கிறது என்று
ஆனால் வெளிநாடுகளில் வெளியிடப்பட்டு ஆங்கிலத்தில் வந்த FIRST POST,THE HINDU... போன்றவைகளில் எழுதப்பட்ட விமர்சனங்களில் அத்தகை வன்முறைகள் இருப்பதாக சொல்லவில்லை
இங்கு மட்டும் ஏன் இப்படி....? இவர்களின் தடை எனும் அஸ்திவாரம் உடைந்துபோன வயிற்றேரிச்சலில் இப்படி எழுதுகிறார்களா? உலகநாயகன் மீது உள்ள வெறுப்பில் இப்படியா?
இவைகள் உண்மையில் மக்களை விஸ்வரூபம் படம் பார்க்க விடக்கூடாது என்ற சதியுடன் எழுதப்படுவதாகத் தெரிகிறது ....நாளை உண்மை வெளிச்சத்துக்கு வரும்
உண்மையின் வெளிச்சத்தை விட்டில் பூச்சிகள் என்ன செய்யும்?
ஆனால் உண்மையில் அத்தைகைய கொடூரங்கள் இருப்பின் உலகநாயகனுக்கு இங்கே இருக்கும் செல்வாக்கு இல்லாமல் போய்விடும் விஸ்வரூபம் விபரிதம் செய்துவிடும்
பிறகு விஸ்வரூபம்-II அவரே இயக்கி அவரே நடித்து அவரே வீட்டில் போட்டு பார்த்துக்கொள்ள வேண்டியதாகிவிடும்
சினிமா-ஒரு பொழுது போக்கு என்பதை மறந்தவர்கள் நிலை பரமபதவிளையாட்டில் உயரப் போய் கீழே விழும் பரிதாபகரமானது
............................பரிதி.முத்துராசன்
thanks-YouTube-Dsmediatv
**************************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |