வினோதினி...............
நீ
எந்த தவறும் செய்யவில்லை
நீ பிறந்தது பெண்
பெண்ணாகப் பிறந்ததுதான்
அதுவும்
அழகாய் பிறந்ததுதான்.....!
நீ செய்த தவறு ....
இங்கே ஆண்வர்க்கத்தில்
ஒர் அயோக்கியன்
அவன் ஒரு காமுகன்
அவன் ஆசைக்கு
இனங்கவில்லை என்று..
ஆசிட் வீசினான்
உன் அழகு முகத்தை
சிதைத்துவிட்டான்
இதுதான் காதலா...?
இதைக்கொண்டாடுவதுதான்
காதலர் தினமா....?
நிதம் நித்தம்
மாறுவது எத்தனையோ...?
இந்த காதல் மட்டும்
ஆண்
பெண்ணை
அடிமையாக்கும்
ஓரங்க நாடகம்.....!
அதுமட்டும் மாறுவதில்லையே!
அதுமட்டும் மாறுவதில்லை...!
சில அயோக்கிய ஆண்களின்
ஆணவம் அழிவதில்லை..!
வினோதினி...............
இன்று நீ இறந்து போனாய்...
ஆனால்
என்றும் நீ நினைவில்...
நினைவில் நிற்பாய்..
காதல் வன்முறை
அதன் கயமை கலாச்சாரத்துக்கு
கலங்கரை விளக்காய்.....
thanks-YouTube-Puthiya Thalaimurai
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |