google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எங்கள் மாணவச் செல்வங்கள்

Monday, March 11, 2013

எங்கள் மாணவச் செல்வங்கள்


சுற்றும் உலகை
சுமந்து கொண்டிருப்பவனே..
கிரேக்க நாட்டு 
காவிய நாயகனே...!
அட்லசே!..நீ
அவசரப்பட்டு இந்தப் பூமியை 
பொத்தென்று கீழே போட்டுவிடாதே!





 

























 
இதோ வருகிறார்கள்
எங்கள் மாணவச் செல்வங்கள்
எதிர்கால இந்தியாவை
எழுந்து நடக்கச் செய்யும்
ஏற்றமிகு இளஞ்சிங்கங்கள்... 

அவர்கள் ஆயுதம்
காந்திய உண்ணாவிரதம்..
ஆனால்
அவர்கள்  கண்டதோ....
அடக்குமுறைஅவலம்

ஆனாலும் அவர்கள்
இந்த உலகைச் சுமக்கும்
நெஞ்சுரம் கொண்டவர்கள்...

இந்த உலகை சுமக்கும்
உன்னையும் தாங்கும்
வல்லமை கொண்டவர்கள்.....

இவர்கள் பயணம்
இன்று முடிந்துப் போகலாம்....  

இவர்கள்.... 
பாரதியின் அக்னிக் குஞ்சுகள்
பற்றவைத்த நெருப்பு 
என்றும் அணையாது.....
.....................பரிதி.முத்துராசன் 

(என்ன குழப்பமாக இருக்கிறதா...?
நாட்டு நடப்புகள் எதுவும் புரியவில்லை 
அதுதான் இந்த கிறுக்கல்.....என்னால் முடிந்தது...?
இன்னும் புரியவில்லை எனில்............
 லயோலா மாணவர்கள் உண்ணாவிரதம் என்னவாகும்?
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1