google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஏன்தான் இந்தப் பரதேசி படம் பார்த்தேனோ...?

Sunday, March 17, 2013

ஏன்தான் இந்தப் பரதேசி படம் பார்த்தேனோ...?

(இது பாலாவின் பரதேசி படம் பார்த்துவிட்டு.... இன்று வாழும் ஒரு பரதேசியின் வாக்குமூலம்)

வாழ்க்கையில்
தொலைந்துபோனவைகளை
மீண்டும் நினைக்கவைத்து....

நித்திரை கெட்டது
நிம்மதி விம்மியது
பாலாவின் பரதேசி படம்
ஏன்தான் பார்த்தேனோ...? 


பாலா! உமக்கே இது நியாயமா...?
நீயும்  ஒரு பரதேசிதான் என்று என்னை
சொல்லாமல் சொல்லிவிட்டாயே...?  

எங்கேயோ ஒரு கிராமத்தில் பிறந்து
எங்கேயோ ஒரு கிராமத்தில் வளர்ந்து
எங்கேயோ ஒரு நகரில்  படித்து...

முப்பது வருடங்களுக்கு முன்பு 
அரசு வேலைதேடி சென்னை வந்து ..
அன்று அதுவும் குதிரைக் கொம்பு
அதனாலே அகப்பட்டுக் கொண்டேன்
முதலாளிக்கு நல்லதொரு தொழிலாளியாக
அன்றிலிருந்து இன்றுவரை
வயிறு நிரம்புகிறது  வாழ்க்கை ஓடுகிறது....

ஆனாலும்....

பாலாவின் பரதேசி படம்
ஏன்தான் பார்த்தேனோ...? 
ஏதோ ஓன்று தொலைந்தது
அதுவும் என்னவென்று தெரிந்தது...? 

அழிந்துபோனது சுயமரியாதை
குலைந்து போனது என் சுதந்திரம்
கலைந்து போனது என் உரிமைகள்

தொலைந்து  போனது தன்மானம்


பாலாவின் பரதேசி படம்
ஏன்தான் பார்த்தேனோ...?  
என்னுள் தூங்கிக்கிடந்த 
தன்நம்பிக்கைய 
தட்டி எழுப்பிவிட்டது...
விழிப்புணர்வை விதைத்துவிட்டது

...............................பரிதி.முத்துராசன்  

***********************************************************************
பரதேசி-சில விமர்சன கீச்சுக்கள்.....
இந்த உடையும்,அடியும் மட்டும் தான் இல்லை,மத்தபடி எல்லாம் ஒண்ணுதான் #பரதேசி படத்தை பார்த்தபோது,சாப்ட்வேர் நண்பர் சொன்னது.
பாலாவின் பரதேசி தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்கும் மகத்தான நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை.

எம்.டி.முத்துக்குமாரசாமி: தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய பிம்பக் கோர்வை பாலாவின் ‘பரதேசி
நான் பிறந்தது முதல் பால்யத்தின் முதற்பாகம் தேயிலைத்தோட்ட வாழ்வியலில் இருந்ததும் பரதேசி படம் நெருக்கமாக ஈர்க்க ஒரு காரணம்
பரதேசி நல்லாருக்குனு எல்லாரும் சொல்லும்போது முரளி இல்லாம போய்டாரேனு தோணுறது எனக்கு மட்டும்தானா?
#Paradesi @gvprakash தரை டிக்கெட் விமர்சனம் - பரதேசி! பாலாவுக்கு இன்னொரு தேசிய விருது பார்சேல்
***************************************************************************
நடிப்பதற்காக இப்படி நடிகர்கள் அடிவாங்குவதை பார்த்தபோது மனம் பதறியது. இந்த கொடூர ச்செயல்  மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம். ரொம்ப அநாகரிகமா நடந்துக்கிட்டிருக்காரு இயக்குனர் பாலா. மிகவும் மோசமாக மனிதத்தன்மைக்கு அப்பார்ப்பட்டதாக நடந்துகொண்டிருக்கிறார். ....
பாலாவின் இந்த செயல்பாடு ஒரு நல்லத்திரைப்பட கோட்பாடும் அல்ல. அடிப்படையில் இது மனித உரிமைமீறல்.  முதலாளி தொழிலாளி பிரச்சனையாக பார்க்கவேண்டும். 

..............................மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர். அ.மார்க்ஸ்

பாலாவின் இந்த செயல் நியாயமா....?

வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1