(எச்சரிக்கை-சினிமா நடிகர்களின் அபிமானிகள் இப்பதிவைப் படிக்கவேண்டாம் இவை எனது உணர்வுகளின் பிரதிபலிப்புகள். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை..மீறி படித்து புண்பட்டால் நான் பொறுப்பல்ல.....)
காந்தியின் உண்ணாவிரதம்
அஹிம்சையின் அடையாளம்
அநீதியை எதிர்த்து
அமைதிப் போராட்டம்....
அன்று ஆண்டவர் ஆங்கிலேயர்
அவரோ வெளிநாட்டினர்
ஆயினும் அவர்தம் கல்நெஞ்சம் கலங்கியது.
அன்னை இந்தியா விடுதலையானது
அதற்குப்பிறகு
ஆள்பவர் இந்தியராயினும்
அநீதியை எதிர்த்து நடந்தன.....
எத்தனையோ உண்ணாவிரதங்கள்..
அதில் சில போலி உண்ணாவிரதங்கள்
இன்னும் சில ஜாலி உண்ணாவிரதங்கள்
எந்த உண்ணாவிரதமும் எதுவும் செய்யவில்லை...
அன்று காவேரி நீருக்காக
ஆயிரம் உண்ணாவிரதங்கள்
ஆயினும் கண்டது
கண்களில் நீர் வந்தது....
ஆனால்
ஆண்டுகள் பல ஆயினும்
அமைதியாக ஆரம்பித்த
மாணவர்கள் உண்ணாவிரதம்...
மகத்தானது...மழுங்காதது
மக்கள் போராட்டமாக மாறியது.
இன்று நடிகர்களின்
அடையாள உண்ணாவிரதமாம்
ஆறுதலான உண்ணாவிரதமாம்
இப்போதுதான் இவர்களுக்கு
ராஜபக்சே அனுமதிகொடுத்தானோ...?
இல்லையேல் இங்கே உள்ள
இனவெறியன் சகோதரர்கள்..
வராது சி.பி.ஐ.என்று
வாக்குறுதி அளித்தனரோ....?
அய்யகோ..அவர்கள்
அன்று மாணவர்களுக்கு
ஆதரவாய் ஒரு குரல் கொடுத்திருந்தால்....
ஆர்பரித்து எழுந்திருக்கும்
அவர்கள் ரசிகர்கள் பட்டாளம்...
அற்புதங்கள் நடந்திருக்கும்
புதுப்புது வித்தைகள் செய்யும்
உத்தமப் புத்திரர்களே!
அப்போது எங்கே போனீர்கள்...?
பாலாபிசேகம் ரத்த அபிசேகம்
உங்கள் பதாகைகளுக்குச் செய்யும்
உங்கள் படை பட்டாளங்கள்
அப்போது எங்கே போனார்கள்...?
ஒரு குரல் கொடுக்கவும் முடியாமல்
உங்கள் குரல்வளை கட்டிக்கொண்டதோ...?
இப்போது ஏன் இந்த மாய்மாலம்...?
இங்கே உமது பித்தலாட்டங்கள்
இவர்களுக்குத் தெரிந்துவிட்டதே
இனி நம் பாச்சா பழிக்காதே என்ற பயமா?
அய்யகோ...அங்கே பாலிவுட்டில்
வெடிகுண்டு பதுக்கியவனை
கூண்டுக்குள் அடைக்கிறார்கள் என்றதும்
இங்கே கோலிவுட் நட்சத்திரம்
குரல் கொடுக்கிறார்...கொதிக்கிறார்.
என்ன கொடுமையடா இது...?
இவர்களைச் சொல்லி குற்றமில்லை
ஈழம் என்று படிக்கத் தெரியாதவன்
இங்கே தமிழ் நடிகன்..........?
பணம் ஒன்றே குறிக்கோளாக...
பவுசாக வாழ்பவன் எல்லாம்
பரிதாபம் மட்டுமே காட்டுவான்...
அய்யோ தமிழா!
அவர்கள் டூப்பு போட்டு
டம்மி-டும்மி சண்டை போடுபவர்கள்...
மேடையை நன்றாக உற்றுப்பார்
மேக்கப் போடாமல் வந்தேன் என்று
வேறு யாராவது வந்திருப்பார்கள்....
இது மீடியாக்களுக்குக் கிடைத்த தீனி..
வேறு ஒன்றும் ஆகாது போனி....
வார இதழ்கள்-நாளிதழ்களுக்கு
செய்திப் பஞ்சாமிர்தம்...
தொலைக்காட்சிகளுக்கு
நேரலை மூலம் நேரடி வருமானம்...
நியாயன்...................மார்.........களே!
நியாயமா உங்கள் உண்ணாவிரதம்...?
ஒரு பரதேசி தமிழன் கேட்கிறேன்
******************************************************************************
இது எனது கருத்து.....
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்........இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்...இது மீடியாக்களுக்குக் கிடைத்த தீனி..வேறு ஒன்றும் ஆகாது போனி....
இவ்வளவு நாள் கழித்து இன்று நடிகர்கள் உண்ணாவிரதம் இருப்பது ...?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........
***************************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |