குறள் தந்த கவிதை-17
வாங்கிய கடனுக்கு
வட்டியும் கொடுக்காமல்
கடைசியில்
வாங்கிய அசலையும்
விழுங்கி விட்டார்கள்
தனிநபர் கடன்கள்
வாரி வழங்கிய
வெளிநாட்டு வங்கிகள்
பேராசை பெரு நஷ்டம் என்று
முக்காடு போட்டு மூழ்கிப்போயின....
இப்படித்தான்
கடல் நீரை ஆவியாக்கி
கடனாகப் பெற்ற மேகங்கள்
மழையாகப் பெய்யாவிட்டால்
கடல்கூடக் காணாமல் போகும்
குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம் .............................பரிதி.முத்துராசன்
கவிதை தந்த குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
மு.வ உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |