google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மெரினா காந்தியும் மாவீரன் நெப்போலியனும்

Sunday, April 07, 2013

மெரினா காந்தியும் மாவீரன் நெப்போலியனும்


மாலைப் பொழுது 
மெரினாவில்
அலைகடலின் 
ஆரோக்கியக் காற்றை
ஆனந்தமாய்ச் சுவாசித்து..

அங்கே இருந்த கையேந்தி பவனில்
சில்லி சிக்கன்...பிரையிடு ரைஸ் 
அப்படியே பார்சல் பண்ணி...

பளிங்குத் திண்டில் 
பவ்வியமாக அமர்ந்து....
பையிலிருந்து வெளியே எடுத்தான்
டாஸ்மாக் மாவீரன் நெப்போலியனை...

அதன் தலையில் தட்டி
அலாக்காய் திருகி
அப்படியே ராவாய்  
உள்ளே ஊற்றினால்....

டமால் என்று பிடரியில் அடி
திரும்பிப் பார்த்தால்...























நின்று கொண்டிருந்தார்.
கையில் கம்புடன் காந்தி தாத்தா...


பிரம்மையா...? போதையா...?
எதுவும் தெரியவில்லை 
எழுந்து போய்விட்டான்.  

**************************************************
அரசியல் தத்துவம்........... 























thanks-image-jothiji  

நாட்டை ஆளுகின்ற 
நியாயன்மார்களே!-நீங்கள்
நல்லவை செய்யாவிடினும்...
அல்லவை செய்யாதிருங்கள்  


*****************************************************************************

கவிதை கேளுங்க...................



அந்தப்  பட்டாம்பூச்சி
மீண்டும் கூட்டுப்புழுவானது.....
பெண்ணாகப் பிறந்ததால்!

********************************************************************************
                              ------------------இது கருத்து கருந்தேள் பக்கம்------------------- 

அசடு வழியும் அரசியல் ஜொள்ளு...........

பெண்ணை புகழ்ந்த விவகாரம்: மன்னிப்பு கேட்டார் ஒபாமா- இந்திய வம்சாவளி பெண் வக்கீல் கமலா ஹாரிஸின் அழகை புகழ்ந்ததற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கேட்டார் 



 பெண்ணின் அழகை பொதுமேடையில் வர்ணிப்பது அமெரிக்க அதிபர் பதவிக்கு உரிய செயல் அல்ல என்று ஊடகங்கள் ஒபாமாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.

கருத்து கருந்தேள்..... 

நல்ல கூத்து....அமெரிக்காவாக இருந்தாலும் இந்தியாவாக இருந்தாலும் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே இனம்தான்....நல்ல ஜொள்ளு பார்டிகள்தான் 
அட..எங்க அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா........
அட..அமெரிக்க மக்கா...
அதை அப்படியே விட்டுபுட்டு வேறு வேலை இருந்தாப் பாருங்கப்பா....
எங்க ஈழ தமிழர் இனத்துக்கு ஏதாவது நல்லது செய்யுங்கப்பா

******************************************************************************
செய்தியும் சிந்தனையும்...........


ஸ்ரீநகர் படகு வீட்டில் தங்கி இருந்த இங்கிலாந்து பெண் கற்பழித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, தப்பி செல்ல முயன்ற ஆலந்து நாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்....நன்றி மாலைமலர் 


ஏம்பா...ஆலந்து நாட்டு தும்பி....சும்மாவே  இந்தியாவில இவிங்க தொல்ல தாங்கமுடியல...இதுலவேற நீ ஆலந்தில இருந்து வந்து இங்கிலாந்து நாட்டுக்கார பெண்ணை ...கையப்பிடிச்சு இழுத்தாலும் பரவாயில்ல கொலையே பண்ணிட்டிய... படுபாவிப்பயல...பஸ்லதான் இவிங்க பண்ணுவானுங்க...உனக்கு சொகுசு படகு வீடு கேட்குதா....? 
.  
*****************************************************************************

கோலிவுட் சினி பப்ஸ்.........  

"தலைவா" அரசியலை கொறிக்கும் திரைப்படமா....? 

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இளைய தளபதியின் "தலைவா" திரைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது அரசியல் அபிமானிகள் மத்தியிலும் எதிர்பார்ப்பின் உச்சத்தை உருவாக்கி உள்ளது  விஜய்-அமலா பால் இணைந்து நடிக்கும் A.L.விஜய் இயக்கத்தில் தலைவா காதல் அதிரடி திரைப்படம் என்று சொல்லப்பட்டாலும் அப்படத்தின் பதாகைகள் சொல்லுவதோ............



TIME TO LEAD என்று  அரசியல் கலந்திருக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறது..முன்பு (திமுக) தளபதி என்ற  பட்டத்தை பறித்துக்கொண்டு இளைய தளபதியான  விஜய்.... இப்போது தலைவர் பட்டத்தையும் பறித்துக்கொண்டு இளைய தலைவர் விஜய் ஆனாலும் ஆகலாம்

********************************************************************************
பாரதிராஜாவை பாராட்டுவோம்......
 
தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு வலியுறுத்தி லண்டனில் எழுச்சிப்பேரணி: டைரக்டர் பாரதிராஜா பங்கேற்பு....'ஈழம் கிடைக்கும். இனி மேல் தமிழன் என்பவன் ஈழத்தமிழன், இந்தியத் தமிழன், மலேசியத் தமிழன், கனடாத்தமிழன் என பிரித்து பார்க்காதீர்கள். தமிழன் எல்லோரும் அவன் எங்கிருந்தாலும் ஒரு குடையின் கீழ் இருக்கிறோம்' என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார். 


























அல்லிநகரத்திலிருந்து புறப்பட்டு புதுமை புரட்சி செய்த சினிமா சிந்தனை  வேங்கை பாரதிராஜா  ஆங்கிலேயர் நாட்டில் லண்டன் பேரணியில் கலந்து கொண்டு வீர உரை  ஆற்றியதும் அவரது உண்மையான சமுக ஆர்வமும் பங்களிப்பும் பாராட்டப் படவேண்டியதுதான்...  

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1