google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஏம்பா..டெல்லில ஏதும் புதுசா காயகல்பம் விக்கிறாங்களா?

Tuesday, April 23, 2013

ஏம்பா..டெல்லில ஏதும் புதுசா காயகல்பம் விக்கிறாங்களா?

http://25.media.tumblr.com/8519518d7852965dae4b59c4d7da49b6/tumblr_mges7r974g1rm63oko1_500.jpg  

எலே..அறிவுச்செல்வா...என்னடா நடக்குது டெல்லியில..?
உனக்கு ஒரு உண்மை தெரியுமால....?
உலகத்துக்கு ஒரு நாள்தான் முட்டாள்கள் தினமாம் 
ஆனால் நம்ம நாட்டுக்கு 365 நாட்களும் முட்டாள்கள் தினம்களாம்ல..நாடும் நாட்டு மக்களும் (பாவகொ) பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுறாங்கல

http://www.janamtv.com/news/img/a02dv62kot_b93nh7w0sc_6gi3pk7h6d_b.jpg

வழக்கம் போலத்தான் ஆளும் அரசாங்கமும் அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் "அதிரடி நடவடிக்கை தவிர வார்த்தைகள் தேவையில்லை" என்று வீர வசனம்தான் பேசுறாங்கல....
வாக்குறுதி வாரி வழங்குறாருங்க...

http://web.vecer.com/PORTALI/PODATKI/2012/12/25/SLIKE/ONLINE_155258-300.jpg  
அய்யோ... பாவம்ல மீண்டும் மீண்டும் கடுமையான தண்டனைகளும் சட்டத்திருத்தங்களும் வேண்டும்னு மாணவர்களும் சமுக ஆர்வலர்களும் கோபம் கொண்ட குடிமக்களும் தெருவில் வந்து போராடுறாங்கல...இது பாக்குறதுக்கு தெருக்கூத்து மாதிரி இருக்குதுல...

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் 336% (விழுக்காடு) அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் சொல்றாங்கல

கடந்த டிசம்பர் மாசத்துக்குப் பிறகு...மாதம் 45 கற்பழிப்பு வழக்குகளும் 75 பாலியல் தொல்லை வழக்குகளும் பதிவு செய்யப்படுதாம்ங்ல .
இதுவரை இந்தியாவில் மூன்று கோடி பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளனதாம்ல
(அடேங்கப்பா...ங்கொக்கா மக்கா...நீதிபதிகளே பாவம் நீங்க என்ன செய்வீங்க..நம்ம சட்டம் இப்படி ஆமைவேகத்தில் ஒ...டுகிறது...அவ்வவ)




ஏலே..அறிவுச்செல்வா.. நா என்ன சொல்ல வருகிறேனா....5 வயதில் ஒரு பெண் குழந்தை பாலியல் தொல்லைக்கு ஆளானா...அது வெளியே தெரிந்து போலிசு FIR போட்டு கோர்ட்டுக்கு போனா .அந்த சிறுமி 50 வயது கிழவியானப் பிறகும் தீர்ப்பு வராதுல.. இதுதான் இன்று இந்தியாவில் (பாவகொ) பாலியல் வன்கொடுமை சட்டத்தின் உண்மை நிலவரம்ல....
அப்படியே பாவம் அவளும் போய் சேர்ந்திடுவாள்...இல்லையேல் அந்த குற்றவாளியும் குடு குடு தொண்டு கிழமாகி மண்ணுக்குள் மறைஞ்சிடுவான்....
ஏம்பா..டெல்லில ஏதும் புதுசா காயகல்பம் அல்லது சிட்டுக்குருவி லேகியம் கிடைக்குதாப்பா...?இப்படி அலையிறீங்க... ..இதுக்கு என்னதான் முடிவுனு தெரியல.... 


(அண்ணேன்...எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவா...வயக்காட்டு களத்து மேட்டுல காக்காயை விரட்டனுமுனா....ஒரு காக்காயை கொன்னு தொங்க போடனும்னு..பயத்தில மற்ற காக்கா எதுவும் வராதுன்னு...இவிங்க எல்லாம் மனுசனுங்க ...என்ன பன்றதுன்னு பெரிய மனுசனுங்கத்தான் முடிவு பண்ணனும்)  
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1