google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பி.பீ.ஸ்ரீநிவாஸ்-இதயத்தைப் பாடவைத்தவர்

Monday, April 15, 2013

பி.பீ.ஸ்ரீநிவாஸ்-இதயத்தைப் பாடவைத்தவர்



freeonlinephotoeditor  

பி.பீ.ஸ்ரீநிவாஸ்-

தாய் பாடிய தாலாட்டை
கேட்டதில்லை..
இதுவரை
நீ பாடிய பாட்டுக்களை
கேட்காமல் துயில்வதில்லை

நீ
காற்றில்
வார்த்தைகளை
வரைந்து வைத்தவன்
காற்றுக்கு
உருவம் கொடுத்தவன்
இசை ஓவியனே!
காற்று இருக்கும் வரை
போற்றிப் பாடும் உன்னை.

நீ
இதயத்தைப்
பாடவைத்தவன்
அதனால்தான்
உன் பாடல்கள்
இதமாக இருக்கின்றன
குயில்களும்
உன் குரலோசை கேட்டால்
மௌனமாகி விடும்

நீ 
ஒலியை
நளினமாக 
நாட்டியமாட வைத்தவன்
நங்கையின் நாணத்தோடு
நடை போட வைத்தவன். 

உன் பாடல்களில்
அழுத்தம் இருக்காது
அமுதம் இருந்தது
ஆர்ப்பாட்டம் இல்லை
அமைதி இருந்தது.

இன்று  
மரணம் உன் உடலுக்கு
என்றும் இல்லை 
மரணம் உன் குரலுக்கு.

                                             .......................................பரிதி.முத்துராசன் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1