google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காந்தி அரசியல்வாதியானால்....

Wednesday, May 01, 2013

காந்தி அரசியல்வாதியானால்....



இன்று உத்தமராயினும் 
அரசியல் செய்ய ஆசைப்பட்டால் 
ஊன்றுகோலை உதறிவிட்டு 
கையில் வெட்டரிவாளோடு 
வீதிஉலா வரவேண்டுமோ...?

இடுப்புக் கடிகாரத்தை விடுத்து 
வெடிக்கும் குண்டுகள் 
வைத்திருக்க வேண்டுமோ...?

இல்லையேல் அவரும்
இன்னொரு அரசியல்வாதியின்
அல்லக்கைகளால் வெட்டுப்பட்டு 
வீதியில் கிடப்பார் மதுரை வீரன் போல் 
மாறுகால் மாறு கை வாங்கிவிடுவார்கள் 
108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் 
அவர் உயிரும் போய்விடும் 

அன்று அய்ம் புலன்களையும் 
அடக்கி ஆளுவோரே துறவியாவார் 
இன்று அய்ம் புலன்களையும்
அவதூறாய் வைத்திருப்போரே
அரசியல்வாதியாவார் 

இன்று அரசியல் ஒரு வியாபாரம்
அதில் லாபம் அரசியல்வாதிக்கு 
நஷ்டம் நாட்டு மக்களுக்கு 

(சேலத்தில் காந்தி சிலை உடைப்பு.. சேலம் கொண்டப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் 2 அடி உயர மகாத்மா காந்தி சிலை உள்ளது. நேற்று காலை சிலையில் 2 கைகளும் உடைக்கப்பட்டு இருந்தது. ........................நன்றி-செய்தி தினகரன் 1-5-2013 )


குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்    

குறள் 24:

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.
  மு.வ உரை:

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1