google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஓட்டுக்காக ஒட்டறை அடிக்கிறார்கள்

Friday, May 03, 2013

ஓட்டுக்காக ஒட்டறை அடிக்கிறார்கள்



அப்பன் மாடு மேய்த்தால்
அவன் மகனும்
மாட்டுக் கன்று மேய்க்க...

அப்படியே
அப்பன் பூசை செய்ய
அவன் மகனும்
மந்திரம் சொல்ல..

கற்றறிந்த அறிஞர்
கண்டறிந்த கல்விமுறை
குலத்தொழில் கல்விமுறை
அவர் குலம் ஒங்க
அவர் செய்த பரிந்துரை
அதுவே  எழுதியது
அவர் ஆட்சிக்கு முடிவுரை

http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-prn1/p480x480/67562_358000400987049_1640327770_n.jpg

ஆனால்
எல்லோருக்கும் கல்வி என்று
எழுச்சி கொண்டு எழுந்து வந்து
புரட்சி செய்த பெருந்தகை
படிக்காத மேதை காமராஜர்

பசிவந்தால் பத்தும் பறக்கும் 
படிப்பும் அத்தோடு நிற்கும் 
பசியைத் தனித்தவர் 
படிப்பறிவை திணித்தவர் 
செயற்கரிய செயல் செய்தவர்  

இப்போதெல்லாம் 
இலவசங்கள் கொடுத்து
மக்களுக்கு நல்லது செய்ய 
மதுக்கடைகள் திறக்கிறார்கள் 
கஜானாவை நிரப்புகிறார்கள் 

பசித்திருப்போர் புசித்திடவே
மலிவு விலையில் 
இட்லி அவிக்கிறார்கள்

நாட்டுக்கு நல்லது செய்ய

ஓட்டுக்காக 
ஒட்டறை அடிக்கிறார்கள்

இவர்களும் பெரியோர்களே 
இல்லை என்பார் இருப்பார்களே 
இரும்பு கம்பிகளுக்கிடையிலே...?
 
 கவிதை தந்த குறள் 26:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
மு.வ உரை:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்     

                                      thanks-YouTube-Ravikumar Rajendiran



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1