google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அன்னை தெரேசா-பெற்றவர் மட்டும்தான் அன்னையா...?

Wednesday, May 08, 2013

அன்னை தெரேசா-பெற்றவர் மட்டும்தான் அன்னையா...?

http://www.grudgbox.com/images/users/Emma_Silverman/Emma_Silverman_51361a4346765.jpeg  

பெற்ற அன்னையோ 
தன் குழந்தைகளை மட்டுமே 
பேணிக் காப்பாள்
ஆனால் 
இந்த அன்னைக்கு 
மனித உயிர்கள் 
அத்தனையும் ஒன்றுதான் 

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/p480x480/399728_570086143025791_1674349483_n.jpg

மனித உயிர்களில் 
மதவேறுபாடு இல்லை 
வாழும் உயிர்களில் 
உயர்வு தாழ்வு இல்லை 
பச்சிளம் குழந்தையாயினும் 
உதிரும் முதியோராயினும் 
அன்னையின் 
அன்புத்தாலாட்டில் 
அவர் துயர் நீங்கினர்..

freeonlinephotoeditor

கல்கத்தா வீதிகளில் 
குப்பைத்தொட்டி
பெற்ற பிள்ளைகள் 
அன்னையின் மடியில் 
முகவரி பெற்றனர் 

சாக்கடைக்கட்டையாய்
நோய்க் கிடையில் 
மிதந்து  கிடந்தவர்கள்
அன்னையின் சேவையில் 
சந்தனக் கட்டையானார்கள்

http://gopmotbantay.files.wordpress.com/2011/09/2a.jpg?w=655
அழுக்குத்துணியாய்
கிழிந்து கிடந்தவர்கள் 
அன்னையின் அன்பில் 
பட்டுத் துணியாய் 
பரிணமித்தார்கள்

எதுவும் தன்னிடம் 
இல்லை என்றாலும்...
உதவும் எண்ணத்தை 
உதறியது இல்லை 
அன்றாடம்  யாசகம் பெற்று 
அடுத்தவர் பஞ்சம்  விரட்டிய 
அன்னைக்கு வரும்
சோதனைகளுக்கும் 
பஞ்சமில்லை

அதிலொரு நிகழ்வு...
தெரு வணிகர் ஒருவரிடம் 
"இல்லாதாருக்கு உதவிட..
இருப்பதை கொடுங்கள்" என்று 
கையேந்திய அன்னையின் 
அன்புக்கரங்களில் 
எச்சில் உமிழ்ந்தார் அவர் 
ஆனாலும் அன்னையோ 
அதை துடைத்து விட்டு...
மீண்டும்....
இதழ்களில் புன்னகை தவிழ
இரு கைகளையும் ஏந்தினார்...
"அய்யா..இது எனக்கு 
இன்னும் ஏதாவது கொடுங்கள் 
இல்லாத ஏழைகளுக்கு"  என்று.
அந்த வணிகரோ 
அவர் செய்த தவறை உணர்ந்து 
தன் கல்லாப்பெட்டியையே
அன்னையின் கைகளில் கொட்டினார்

http://www.prolifeinfo.ie/am_cms_media/pprofile-mother-teresa.jpg

தன்னை வருத்தி 
இன்னொரு உயிருக்கு 
அன்பை ஊட்டியவர்
அன்னை தெரேசா-
பெற்றவர் மட்டும்தான் அன்னையா...?      
இவரின்றி உலகில்
உயர்ந்தோர்  உண்டோ..?

கவிதை தந்த குறள் 30:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
கலைஞர் உரை:
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்     
                                  thanks-YouTube-by lovingyouisez

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1