google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தமிழர்கள் காட்டுமிராண்டிகளா...?

Sunday, May 12, 2013

தமிழர்கள் காட்டுமிராண்டிகளா...?

http://www.nagappasculptors.com/Gallery/images/thiruvalluvar.jpg  
அறவழி நூல்கள்
அதிகம் தமிழில் மட்டுமே
அதிலும் அரியது குறளே
அப்படியென்றால்
அன்றைய தமிழர்கள்
காட்டுமிராண்டிகளா...?
பண்பில்லாதவர்களா..?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHh1xVpfAg1WYRS0MgX0giaH-tbBu8vD3YK9qCQzs6fsKlFPAB7d-kZ9QDAgn52zfLMslnoCa80Vfm61Cjns_qC8NW3C4r4oNRHDI-9REGMbg0owSEkVYIj0HqxHFJnMQGbrqTCdHIDko/s400/untitled.bmp

அன்றைய தமிழர்களின்
அறியாமை அகற்றத்தான்
அறத்துப்பால் எழுதினாரா...?
அன்றைய தமிழர்களுக்கு
பொறுப்பின்மை இல்லாததால்
பொருட்பால் எழுதினாரா...?
அன்றைய தமிழர்களின்
காமக்களியாட்டத்தை
கன்ட்ரோல் பண்ணத்தான்
காமத்துப்பால் எழுதினாரா..?

https://lh4.googleusercontent.com/-5bavzPb9a8A/UXz-9NHbmII/AAAAAAABAbQ/XehjkTKH8Uk/w476-h374/27TH-RIOT_1440444f.jpg
இல்லை இல்லவே இல்லை...
அன்றைய தமிழர்களின் 
நெஞ்சில் கயமை இருந்திருந்தால்..
அய்யன் வள்ளுவர்  நாக்கு
பொய் நாடகம் போட்டிருக்கும்
அவர் எழுதிய வார்த்தைகள்
அவருக்குத் தெரியாமலே
அரிதாரம் கட்டியிருக்கும்
அன்றைய தமிழர்கள்
அனைவரும் நல்லவர்களே
அவர்களில் ஒருவர்தான்
அய்யன் வள்ளுவர் அவர்களே!

freeonlinephotoeditor
கவிஞ்சர்கள் 
காலத்தின் பிரதிநிதிகள் 
கவிதைகள் 
காலத்தின் பிரதிபலிப்புகள்
கயமை கொண்டவர்
கவிஞ்சராக முடியாது
பொய்மை நிறைந்தவர்
புலவராக முடியாது
சாக்கடைப் பூக்களில்
சந்தனம் மணக்காது.

freeonlinephotoeditor

இன்றைக்கு
காதல்  காமமானது
அரசியல் அசிங்கமானது
வாய்மை வறுமையானது.
மனிதாபிமானம் மரித்தது.
இல்லாமையிலும்
இயலாமையிலும் 
இன்றைய தமிழர்கள்
அதனால்தான்
இன்றைய கவிஞ்சர்கள்
இப்படி இருக்கிறார்கள் 
அன்றைய தமிழர்கள் நல்லவர்களே 
இன்றைய தமிழர்களே காட்டுமிராண்டிகள் 

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash3/p480x480/17768_576582935694791_2106711009_n.jpg

அய்யன் வள்ளுவர்
அன்றைய தமிழர் அடையாளம்
என்றும் உண்மையின் உருவம்...
அதனால்தான் 
அவர் சொன்னவைகளை 
காலக்கரையான்களால்
செல்லரிக்க முடியவில்லை

கவிதை தந்த குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
கலைஞர் உரை:
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்    
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1