google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தாயே...தந்...தாயே! (காக்க கவிதை)

Thursday, May 16, 2013

தாயே...தந்...தாயே! (காக்க கவிதை)

http://4.bp.blogspot.com/-h4ISg95t6To/ThqbuBBBvAI/AAAAAAAAAbk/6WL7saIyoHM/s1600/13MayKVR01AIADMK_wi_630586f.jpg

தாயே! 
நீங்கள்  இருக்கும் நாட்டில்
ஏழைகள் இருக்கலாகாது
என்றுதான் நினைத்...தாயே
விலையில்லாப் பொருட்களை
வாரித் தந்...........தாயே 

http://qph.is.quoracdn.net/main-qimg-b479cfd2cbeaa4de213ace18784f1b2f


அறுசுவையோடு புசிக்க
அம்மா உணவகம் தந்...தாயே!
ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி 
உலக சாதனை செய்...தாயே! 

https://lh3.googleusercontent.com/-IKUd3FxrKmc/USYABY4zMKI/AAAAAAAADp0/fB-OCUzYwVY/w497-h373/amma-mess-600.jpg

மலிவு விலையில் 
அறுசுவை சாதங்கள் 
அன்பாய் தந்...தாயே!
இன்று தமிழகமெங்கும் 
கிளைகள் செய்..தாயே!
நாளை பாரதமெங்கும் 
பரவிடச் செய்...தாயே!
ஏழைகள் பசியை 
தனித்..தாயே!
தனிப்பெரும் தாயே!

http://hosuronline.com/hp/pictures/jaya_7.jpg


இன்னும்
உங்கள் பயணம்
முடிவில்லாதது...
உங்கள் அறவழித் திட்டங்கள் 
அடிக்கல் நாட்டியத்தோடு 
அடங்கிப்போககூடாது 

அம்மா...
இன்னும் நீங்கள்
இந்த நாட்டுக்கு
செய்ய வேண்டியவை
நிறைய இருக்கு

இன்னும் நீங்கள்
காட்டவேண்டிய
அறவழிப் பாதைகள்
நிறைய இருக்கு

ஏழைகள் இல்லாத நாட்டில் 
மதுப்போதையில் 
கோழைகள் இருக்கலாமோ..?
மதவெறியர்களும் 
சாதி வெறியர்களும் 
சங்கடம் செய்யலாமா>...?

freeonlinephotoeditor

தடைகற்களை
தகர்த்தெறியுங்கள்
எல்லையில்லா பயணம்
இல்லையென்று சொல்லுங்கள்  
பொறுத்தது போதும் அம்மா! 
பொங்கியெழுங்கள் சுனாமியாக 

ஈராண்டு சாதனைகள்
ஆட்சியில் நீங்கள் 
இருக்கும் வரையே பேசும்
இன்னும் வரும் ஆண்டு 
உங்கள் சாதனைகள் 
வரலாற்றில் இடம்பெறட்டும்

கவிதை தந்த குறள் 36:
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
 விளக்க உரை.........
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.
குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்  

**************************************************************************

 அண்ணேன்... ஹைக்கூ கவிதை கேள்விப்பட்டு இருக்கிறேன் ..இது என்ன அண்ணேன் புதுசா காக்கா கவிதை...அம்மாவின் விசுவாசிகள்கூட உங்க கிட்ட தோத்துப் போயிடுவாயிங்க..அவ்வவ்வ  
 
அடேய்..தம்பி அறிவுச்செல்வா!  நன்றா படி..அது காக்கா பிடிக்கும் காக்கா கவிதை அல்லடா..காக்க கவிதை ...இன்று தமிழகத்தையும் அதன் அமைதியையும் தனியொரு பெண்மணியாக இருந்து காக்கும் அம்மாவைப் பற்றி காக்க காக்க கந்தசஷ்டி போன்று இதுவும் ஒரு காக்க கவிதையடா...ஆங் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1