google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரஜினிகாந்த்-இவர் வழி எந்த வழி...?

Friday, May 17, 2013

ரஜினிகாந்த்-இவர் வழி எந்த வழி...?


ரஜினிகாந்த்-
என்வழி தனிவழி 
என்று சொல்லும் 
இவர் வழி எந்த வழி? 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1QcdExoDwjNB1v-Fm50jqaY_yUmUWNIoAnVR4uaOrGiIjWNJBWl1VnKYn8a3GANo0pvKE4r_D1M-Q8ffTdeuu1_TYSG4cFOiPrIi060KOizWQGdcIOCSaAaMKNB99mFXdGp8B2g6hntfA/s1600/5.jpg
அளவில்லாப் பணம்
அதீதமானப் புகழ் 
அத்தனையும் 
இவர் காலடியில்..
ஆனால்..
அவரது இதயமோ
இமயமலையின் 
அடிவாரத்தில்...

http://25.media.tumblr.com/tumblr_lprz7iXiyI1qlq8cmo1_500.jpg

இவர்வழி 
ஆண்மீகவழி 
அதனால் அவர் 
ஆன்மீகத் துறவி அல்ல 
அதிசயப் பிறவி

freeonlinephotoeditor

அறம் செய்யும் வழி என்று 
அவர் செல்லும் வழி அது 
திருத்தலங்கள் நிறைய  
அவர் செய்த உதவிகளை 
சரித்திரங்களாய்ச்  சொல்லும்

http://img.allvoices.com/thumbs/event/480/385/65354660-rajini-himalayas.jpg

தன்னம்பிக்கை 
உழைப்பு 
அவரது உயர்வு
அவரது வரலாறு 
சிபிஎஸ்இ மாணவர்கள் 
சிறார் பாடப்புத்தகத்தில்....

புதிய தலைமுறைக்கு 
புத்துணர்வு வழிகாட்டி..!

கவிதை தந்த குறள் 39:

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
கலைஞர் உரை:
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.
குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன் 
                                             thanks-YouTube-by televijay

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1