google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என்னது நேரம் நல்லாயில்லையா...?

Friday, May 24, 2013

என்னது நேரம் நல்லாயில்லையா...?

http://images.desimartini.com/media/versions/main/original/8d980526-b6da-4dba-845c-f5184a473163_original_image_500_500.jpg  
(இந்தப் பதிவு  சும்மா சிரிக்க மட்டுமே...இங்கே எந்த  லாஜிக்கும்  பார்க்காதீங்க...அப்புறம் படிச்சிப்புட்டு ...என் மீது கோபப்படாதீங்க...)  
 
நேரம் நல்லாயில்லை
என்று சொன்னார் அவர்
என்னது....
நேரம் நல்லாயில்லையா...?
நேற்றுதானே பார்த்தேன் 

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash3/p480x480/935641_624171864277443_834623641_n.jpg

நல்லாத்தானே நடிச்சிருந்தார் 
நவின் என்ற நடிகரும் 
நஸ்ரியா என்ற நடிகையும்

freeonlinephotoeditor
கட்டையோ? 
உருட்டுக்கட்டையோ?
காவல் அதிகாரியும் 
சரவனர்ர்ர் 
அண்ணன் ராமையாவும் 
(தம்பி என்றால் கோபிப்பார்)

freeonlinephotoeditor

கெட்ட நேரம் தரும் 
வில்லன் வட்டிராஜாவும் 
கெட்ட நேரம் வந்து 
சட்டுன்னு போயிட்டார்...
நம்ம பதிவர்களும் பாராட்ட 
நாளிதழ்கள் சொன்னதும்
நேரம் நல்லாயிருக்குனுதான் 

freeonlinephotoeditor

'படம் ஓடுகிறதோ இல்லையோ 
படத்தில் எல்லோரும் 
எப்போதும் ஓடிக்கொண்டே 
இருக்கிறார்கள்' என்று 
காலை வாரிவிட்டது 
ஒரு வாரயிதழ் மட்டும்தான்

ஆழ்ந்த யோசனையில் 
அமர்ந்திருந்த போது...
திங்கள்-செவ்வாய்-புதன்
ஏதேதோ எழுதிக்கூட்டி...
அரசமரத்தடி ஜோதிடரும்
அலறிக்கிட்டு சொன்னார்... 
 

http://angelinmery.weebly.com/uploads/4/6/5/4/4654898/6727810.jpg?423  

"சனி பிடிச்சிருக்கு உனக்கு 
இப்ப நேரம் நல்லாயில்லை     
முற்றும் துறந்தவர்களுக்கு 
உதவிகள் செய்தால்....
அடியார்களை நீ
அண்டி வாழ்ந்தால்...
அதுவும் முடிவுக்கு வரும் 
அல்லது அவஸ்தை தரும்" 

கடவுளே!
அட..
கடவுளுக்கும் கடவுளே!
எங்கே இருந்தாலும் நீவீர்
இங்கே கொஞ்சம் வாருமையா...?
அந்தக் காலத்தில்
அடியார்கள் எல்லாம் முற்றும் துறந்தவர்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqaho__-HbnrGjdb4tJfomC-ytZ8uVwmYlVZMH0qsJ4c0FzZjwO2wKZAxIdjJ0TTy2zHKMUMsxseRjSzECZMiQNCC35-EQSlIQKBKK1cLi3ggSmVx868z8YyjPYa8OCeMGjK8xDVgNVA/s748/VALLUVAR_big.jpg

அதனால்தான் 
அய்யன் வள்ளுவரும்
ஈரடியில் எழுதிவைத்தார்...

குறள் 42:
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

இந்தக் காலத்தில்
இருக்கும் உன் அடியார்கள்...
அடுத்தவர் சொத்தை
முற்றும்   கறந்தவர்கள்

கோடிகள்தான்
அவர்கள் சொத்து..

கேடிகள்தான்
அவர்கள் சேர்க்கை

ஏகப்பட்ட பத்தினிகள்
அவர்கள் பக்தைகள்

தங்க அரியாசனம்தான்
அவர்கள் இருக்கைகள்

http://ic.pics.livejournal.com/my19edwin/28036223/556271/556271_original.jpg

இவர்களுக்கு இன்று
இன்னும் உதவினால்...
பாம்புக்கு  
டாஸ்மாக் விஸ்கியும் 
பீரும் பிராண்டியும் 
ஊற்றியது போலாகாதா..? 

கடவுளே!
அட..
கடவுளுக்கும் கடவுளே!
இப்போது 
உமது நேரம்தான்
நல்லாயில்லை...
எங்கும் வெடிகுண்டுகள் 
வெடிப்பதோ உன் அடியார்(ட்)கள்... 
சொல்வதோ உன் மந்திரங்கள் 
செய்வதோ மகா தந்திரங்கள் 

இன்னும் கொஞ்சகாலம் 
இங்கே நீரும் வந்துவிடாதீரும் 
வந்தால் உம்மையும் 
திகாரில் சிறையில்
போட்டாலும் போடுவார்கள் 

http://cs406923.vk.me/v406923095/4743/NLGCqtIWxqQ.jpg

(அண்ணேன்...
இதுவரை உங்கள் குரல் 
அய்யன் வள்ளுவர் குறளுக்கு 
அரசியலைத்தான் அலசியது 
அட..இப்ப சினிமாவையும் 
துவைத்து காயப்போடுகிறது
இலக்கியவாதிகள் 
இருக்கும் பக்கம் போயிடாதீர் 
நல்லாயிருக்காது உமது நேரம்)






  குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1