படம் பார்ப்பவர்கள் உடல் ரீதியாகவோ? அல்லது மன ரீதியாகவோ? பாதிக்கப்பட்டால்....நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்ற நிலை வந்தால்...இந்த சினிமாகாரங்க நிலை எப்படியிருக்கும்?
கொஞ்சம் நினைத்துப் பார்த்தேன் சிரிப்போடு இந்தப் பதிவு வந்தது..ஹா..ஹா...ஹி
ஏதோ ஓன்று குட்டி போட்டது போல் இன்று கோலிவுட்டில் படங்கள் கணக்கு வழக்கு இன்றி வந்து குவிகின்றன...ஆனால் இவர்கள் படங்களைப் போட்டுக்காட்டி காசு பார்க்க அரங்குகள் இல்லை
இந்த நிலை தொடர்ந்தால் படம் நடித்தவரோ? இயக்கியவரோ? அல்லது தயாரிப்பாளரோ அவரது வீட்டு மொட்டை மாடியில்தான் படம் காட்டவேண்டும்
சென்னையில் கூட நிறைய மலிவு விலை திரையரங்குகள் காணாமல் போய்விட்டன...இருப்பவைகள் எல்லாமே மால் (கோல்-மால்) திரையரங்குகள்...
என்னைப் பொறுத்த அளவில் நான் இன்று திரைப்படங்களுக்கு செல்வது கிடைக்கும் ஒய்வு நேரத்தில் என் வேலையின் வியர்வை துடைக்கவே...அப்படியாவது சிலமணி நேரங்கள் மனஅழுத்தம் இன்றி இருக்க...ஆனால் இன்று வெளிவரும் தமிழ் படங்களுக்கு போனால்

காதல் என்ற பெயரில் விரசம்
சண்டை என்ற பெயரில் வன்முறை
வசனம் என்ற பெயரில் துவேசம்
இன்னும் கொடுமை என்னவென்றால் பழைய கள் புதிய மொந்தை என்ற பெயரில் பழைய படத்தின் கதைகளை தூசு தட்டி தில்லு முல்லு உல்டா வேலைகள் செய்து...உயிரை வாங்கிறாயிங்க
பணத்துக்கு பணமும் போச்சு மனநலமும் பாதிச்சு போச்சு
(ஒரு பொருள் வாங்கி அதனால் மனஉளைச்சல் ஏற்பட்டால் நுகர்வோர் (consumer court) நீதிமன்றம் போனால் பல லட்சம் நஷ்ட ஈடு வாங்குகிறார்கள் அதேபோல் சினிமாவுக்கு போய் மனஉளைச்சல் ஏற்பட்டால் அதற்கும் யாராவது நஷ்ட ஈடு கொடுப்பார்களா..? அப்படி ஓன்று நடந்தால் போதும் அதற்கு பிறகு அனைவரும் நல்ல படம் எடுப்பார்கள்.)
அண்ணேன்...சிங்கம் 2 படத்துக்குப் போய் என் காது கிழிஞ்சி போச்சு...எனக்கு நஷ்ட ஈடு கிடைக்குமா...? என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது.... கிடைக்கலாம்..முயற்சித்துப் பாருங்கள்

(ஏலே...போலிஸ்காரன்கிட்டேயே உன் வேலையக் காட்டுறியா...லே...சில்லாட்டப் பயல..இந்தா வாறேம்ல....)
இதாவது பரவாயில்லை...இன்னும் நிறையப் படங்கள் அதிரடி என்ற பெயரில் நம்ம பணத்தையும் வாங்கிக்கிட்டு மட்டையடி அடிக்கிறாயிங்க...நோ சிக்ஸர்...ஆல் அவுட்....அத்தபார் கதையாட்டம்
நுகர்வோர் நீதிமன்றத்தில் யாரேனும் வழக்கு தொடுத்தால்...அப்புறம்
வரும் படங்கள் நல்லப் படங்களாக இருக்கும்...நல்ல கதையம்சம் உள்ளப் படங்களாக வரலாம்
ஏன்...ஏன்...இப்படி....? உங்களுக்கு கதை கிடைக்கவில்லையா..?
உங்களுக்காக நிறைய வலைத்தளங்களை மேய்ந்து...
தமிழ் சினிமாவுக்கு ஏற்ற சில ஒருவரிக் கதைகள் தருகிறேன்
காசுதரவேண்டாம் சும்மா சாப்பிடுங்க...
இதோ அதிரடி த்திரிலர் குறும்படம் கதைவேனுமா...?
இன்றுவரை 12,805,36 பேர் பார்வையிட்ட மினி ஆவணப்படம்
படத்தின் பெயர் =போர்டல்-நோ எஸ்கேப் (Portal: No Escape)
இயக்கம்=டான் ட்ராச்டேன்பெர்க் (Dan Trachtenberg)
கதை=ஒரு பெண் ஒரு அறையிலிருந்து எழும் போது அவள் யார்...? அவள் எப்படி அந்த அறைக்குள் வந்தாள்...? என்ற நினைவு எதுவும் அவளுக்கு இல்லை அவள் எப்படி தப்பிக்கிறாள் என்பதே கதை...?
thanks-YouTube-by dantrachtenberg1
இந்த கதையில் வரும் பெண் கதாப்பாத்திரத்தை அப்படியே உல்டா பண்ணி நடுவில முழு பக்கத்தையும் காணோம் என்று இங்கே உள்ள அதிரடி நாயகர்கள் யாரையாவது கால்-சீட்டோ அரை-சீட்டோ வாங்கி நடிக்க வைத்தால்...சூப்பர் டூப்பர் திரைப்படமாக வெற்றி உறுதி...யாரும் இந்தப் படம் சுட்டப் படம் என்று சொல்லவும் முடியாது...நாம்தான் கதாநாயகியாகி கதாநாயகர் ஆக்கிவிட்டோமே?
இல்லையேல் இதே கதைக்கு கதாநாயகியை காப்பாற்ற வரும் கதாநாயகராக நம்ம ஆட்களில் யாரையாவது பாய்ந்து வரும்படி செய்து என்கிட்ட மோதாதே!....என்று இரண்டுமணிநேரம் சவ்வாய் இழுத்து................முடித்துவிடலாம்.
முன்புலாம் படம் பார்க்க வரச்சொல்லிதான்
தியேட்டர்காரங்க போஸ்டர் ஒட்டுவாயிங்க....
இப்பலாம் பட்டத்துயானை ட்ரெயிலர் காட்டுறோம்
வாங்க...வாங்கனு சென்னையில அபிராமி-சங்கம் தியேட்டர்காரங்க போஸ்டர் ஒட்டுறாயிங்க....
என்னக்கொடுமைடா இது...?
(ஓசியா...? காசா....? ஒன்னும் புரியில...உங்க ஊர்ல எப்படி?)
thanks-youTube-by

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |