google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வார்த்தைகளால் முத்தமிடாதே!

Wednesday, July 17, 2013

வார்த்தைகளால் முத்தமிடாதே!

http://25.media.tumblr.com/tumblr_majgdcGcIA1qahehdo1_500.jpg

உண்மையான ஹைக்கூ கவிதைகள்-8 
செடிகளையும் கொடிகளையும் பாடிக்கொண்டிருக்கும் கவிஞர்கள் காலப்போக்கில் மக்கள் மனதிலிருந்து மறைந்துபோவார்கள் சகமனிதர்களைப் பாடும் கவிஞர்களே என்றும் நினைவில் நிற்பார்கள் சகமனிதர்களின் துயர் துடைப்பவர்களே மகாகவிஞர்கள் ஆனால் இன்று அம்மணிகளைப் பற்றி பாடும் அம்மணக் கவிதைகளே அதிகம் எல்லா வலைதளங்களிலும் காதல் கவிதைகளே நிறைந்துள்ளன 


கவிஞர்களே நீங்கள்  வார்த்தைகளால் முத்தமிடாதீர்கள்  உங்கள் கவிதைகளின் வார்த்தைகள் சகமனிதர்களின் காயங்களுக்கு ஒத்தடமாக இருக்கட்டும்

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் இப்போது இதைத்தான் செய்கின்றன
நீண்ட நாள் கழித்து நம் உறவினர்களையோ நண்பர்களையோ நேரில் சந்திக்கும் போது  அல்லது தொலைபேசியில் தொடர்புகொள்ளும் போது..நல்லாயிருக்கிங்களா? சௌக்கியமா...? என்று ஒரு வார்த்தை கேட்பது போன்று....

இன்று ஜப்பானில் ஒரு பேரழிவு நடக்கும் போது இப்படித்தான் வலைதளங்கள்,பத்திரிகைகள் அனைத்திலும் உலகெங்கிலுமிருந்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளாக ஹைக்கூ கவிதைகள் அவர்களது சோகத்தை துடைக்கின்றன....

http://life.pravda.com.ua/images/doc/3/6/3635eb3-2.jpg

ஜப்பானின் பிரபல ஹைக்கூ வலைத்தளம் மைனிசி(Mainichi)யில் இசாமு ஹாஷிமோட்டோஸ் (Isamu Hashimoto) என்பவர் .....
"வடகிழக்கு ஜப்பானில் மார்ச் 11 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம்-சுனாமி போன்ற இயற்கை பேரழிவுக்கு உலகின் அனைத்துப் பகுதி  ஹைக்கூ கவிஞர்களிடமிருந்து  ஹைக்கூ கவிதைகள் ஆறுதலாக இதயத்தை சூடுபடுத்தும்  வார்த்தைகளுடன் வந்து குவிந்தன" என்று எழுதுகிறார்...

இங்கே அப்படிப்பட்ட சில ஹைக்கூ கவிதைகளைப் பார்ப்போம் 

இந்த ஜப்பான் பூகம்பம்
அதன் அதிர்ச்சி அலை சூழ்ந்தது
உலகம் முழுவதும் ............வசிலே மல்டோவன் (புக்கரெஸ்ட், ருமேனியா)

http://www.forcepenguin.com/wp-content/PicUpload/2011/03/20110328_Japan-slide-VKUR-jumbo-500x338.jpg
சுனாமிக்குப் பிறகு 
அந்த மனிதன் நின்றான் 
அவனது மிதக்கும் கூரை மீது....Verica Zivkovic (செர்பியா) 

http://www.21st-century-christianity.com/images/sad.jpg
அடக் கடவுளே!
நீ நன்றாக இருக்கிறாயா?
மக்கள் இறந்துகொண்டு
..............ராம் குமார் பாண்டே (நேபால்)
 


http://media.sbs.com.au/news/thm/articlemain/site_1_rand_1979289852_japan_earthquake_baby_150311_b_aap.jpg
சுனாமிக்குப் பிறகு 
ஒரு நம்பிக்கை அலை 
சாவாது நீடிக்கிறது.......tephen A. Peters (Bellingham, WA, USA)

மீண்டும் ஒரு புல்மேடு
நீண்டு வெடித்த 
உலர் களத்தில்.......... கே ரமேஷ் (சென்னை, இந்தியா)

சமீபத்தில் ஒரு வலைதளத்தில் உத்தரகாண்ட் பேரழிவைப் பற்றி ஒரு ஆங்கில ஹைக்கூ கவிதை படித்தேன்...........
Giant Peepal tree
a temple with devotees
prayer on their lips.......................tarun mazumdar


பெரிய அரசமரம்
பக்தர்களுடன் ஒரு கோவில்
அவர்களின் உதடுகளில் பிரார்த்தனை.........என்று அவர் பஞ்சாப்பில் ஒரு கிராமத்தில் தான் கண்ட காட்சியை எழுதுகிறார்.உத்தரகாண்ட் பேரழிவில் தங்கள் உறவினர்களுக்கு ஆபத்து எதுவும் வரக்கூடாது என்று விபத்தின் இரண்டாம் நாள் அன்று இப்படி பிராத்தனை செய்கிறார்கள் என்றும் அதேநேரம் அவர்கள் மீது ஆத்திரத்தை அள்ளிவீசுகிறார்...இவர்கள் (பகுத்)அறிவு இல்லாத மக்கள் என்று...

Giant Peepal tree
I look at the shivling*
Kedarnath’s different?

அந்த அரசமரத்தடி கோவிலில் இருக்கும் இதே சிவலிங்கம்தான் கேதரிநாத்திலும்  இருக்கிறது பிறகு ஏன் இவர்கள் இங்கேயே தரிசிக்காமல் அங்கே போய் இயற்கை சீற்றத்தில் இறந்து போகிறார்கள்...? என்று கேட்கிறார்.

ஆனால்..இங்கே தமிழில் இதே போன்று ஒரு ஹைக்கூ யாரேனும் எழுதினால் காட்டுப்பூசிகள் போன்று வந்து மொய்க்கிறார்கள் நீ என்ன மதம்...? நீ என்ன சாதி....? நீ என்ன கட்சி...? என்று  அதனால்தான் என்னவோ நம் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் எதற்கடா வம்பு என்று காதலைப் பற்றி எழுதியும் பாடியும் வார்த்தைகளால் முத்தமிடுகிறார்களோ...?


இங்கே கவிதைகள் என்று புத்தகம் போட்டு வார்த்தைகளை விற்கிறார்கள் வாங்கிப் படித்தால் வாந்திதான் வருகிறது....அவர்களின் கருப்பொருள்....காதல்....காதலும் காதல் சார்ந்தயிடமும் வார்த்தைகளால் முத்தமிடுகிறார்கள்

இன்று தமிழில் குறிப்பிடத்தக்க ஹைக்கூ கவிஞர்கள் யாரும் இல்லை என்று  சொல்வில்லை இருக்கிறார்கள் அவர்கள் வார்த்தைகளில் காதல் மட்டுமே அவர்களும் உண்மையான காதல் கவிஞர்களாக இருக்கிறார்கள் 

          .......................................(இன்னும் வரும்)



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1