(குறிப்பு-இந்தப் பதிவில் பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் சில என்னால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் பகிர்ந்துள்ளேன்)
உண்மையான ஹைக்கூ கவிதைகள்-11
பாஷோவின் இந்தக் கவிதைகள் அனைத்தும் எளிமையாகவும் அதேநேரம் படிப்பவர்கள் மனநிலைக்கு தக்கவாறு பொருள் விளங்குவதாகவும் உள்ளன...எனவே கவிதைகளை மட்டும் தந்துள்ளேன்
மவுண்ட் அசாமா (Mount Asama) சாலை நெடுகிலும்
கற்களை வீசுகிறது
இலையுதிர் காற்று
தவுட்டுக்குருவி
தடுப்பு கம்பி வேலி முகப்பிலிருந்து
சோற்றுக்கவளத்தில் எச்சமிடுகிறது.
புதர்-மணப்புல் மலர்கள்
அசைந்தாடினாலும் கீழே தள்ளவில்லை
அவைகளின் பனித்துளி மணிகளை
இலையுதிர்கால மழை
மவுண்ட் ஃபுஜி(Mount Fuji) மலையை
மிகவும் அழகாக திரையிட்டு மறைக்கிறது.
மேகங்கள்-
நிலவைப் பார்த்து ரசிப்பவர்களுக்கு
ஏமாற்றும் பாசாங்குக்காரர்கள்
குளிர் இரவில் அந்தக் காட்டு வாத்து
வானத்திலிருந்து விழுந்தது போல்
உடல்வலியில் அசந்து தூங்குகிறது.
இரவில் விழித்து பார்த்தப்போது
உறைந்த எண்ணெயால்
குறைந்த விளக்கு வெளிச்சம்
களத்து மேட்டு வைக்கோல்
கெட்டு கறுக்கும் அளவுக்கு
போதுமான அளவு மழை
குளிர்கால மழை
மாட்டுக் கொட்டகை மீது விழுகிறது.
சேவல் கூவுகிறது
புதிதாகக் கழுவிய
வெள்ளைப்பூண்டின் மனம்
ஜில்லென்று வீசுகிறது
கடல் கறுக்கிறது
கடல் வாத்துக்களின் குரல்கள்
களையிழந்து வெளிருகிறது....
காலைப்பனியின்
சகதியில் சிதறின-
குளிரும் முலாம்பழங்கள்
நீண்ட தூர வெளிகளைக் கடந்ததால்
சவ்வாரி இருக்கை உறைந்து
என் நிழல் ஊர்ந்து செல்கிறது.
என்னைப் பின்பற்றாதீர்கள்
முலாம் பழத்தை பிளப்பது போன்று
அலுப்பாகத் தெரியும் உங்களுக்கு.
பேன்களையும் உண்ணிகளையும்
உயிரோடு தின்று இளைப்பாறுகிறது
அந்த குதிரை என் தலையணையில்
..................................................(இன்னும் வரும்)
உண்மையான ஹைக்கூ கவிதைகள்-11
பாஷோவின் இந்தக் கவிதைகள் அனைத்தும் எளிமையாகவும் அதேநேரம் படிப்பவர்கள் மனநிலைக்கு தக்கவாறு பொருள் விளங்குவதாகவும் உள்ளன...எனவே கவிதைகளை மட்டும் தந்துள்ளேன்
மவுண்ட் அசாமா (Mount Asama) சாலை நெடுகிலும்
கற்களை வீசுகிறது
இலையுதிர் காற்று
தவுட்டுக்குருவி
தடுப்பு கம்பி வேலி முகப்பிலிருந்து
சோற்றுக்கவளத்தில் எச்சமிடுகிறது.

புதர்-மணப்புல் மலர்கள்
அசைந்தாடினாலும் கீழே தள்ளவில்லை
அவைகளின் பனித்துளி மணிகளை
இலையுதிர்கால மழை
மவுண்ட் ஃபுஜி(Mount Fuji) மலையை
மிகவும் அழகாக திரையிட்டு மறைக்கிறது.
மேகங்கள்-
நிலவைப் பார்த்து ரசிப்பவர்களுக்கு
ஏமாற்றும் பாசாங்குக்காரர்கள்
குளிர் இரவில் அந்தக் காட்டு வாத்து
வானத்திலிருந்து விழுந்தது போல்
உடல்வலியில் அசந்து தூங்குகிறது.
இரவில் விழித்து பார்த்தப்போது
உறைந்த எண்ணெயால்
குறைந்த விளக்கு வெளிச்சம்
களத்து மேட்டு வைக்கோல்
கெட்டு கறுக்கும் அளவுக்கு
போதுமான அளவு மழை
குளிர்கால மழை
மாட்டுக் கொட்டகை மீது விழுகிறது.
சேவல் கூவுகிறது
புதிதாகக் கழுவிய
வெள்ளைப்பூண்டின் மனம்
ஜில்லென்று வீசுகிறது
கடல் கறுக்கிறது
கடல் வாத்துக்களின் குரல்கள்
களையிழந்து வெளிருகிறது....
காலைப்பனியின்
சகதியில் சிதறின-
குளிரும் முலாம்பழங்கள்
நீண்ட தூர வெளிகளைக் கடந்ததால்
சவ்வாரி இருக்கை உறைந்து
என் நிழல் ஊர்ந்து செல்கிறது.
என்னைப் பின்பற்றாதீர்கள்
முலாம் பழத்தை பிளப்பது போன்று
அலுப்பாகத் தெரியும் உங்களுக்கு.
பேன்களையும் உண்ணிகளையும்
உயிரோடு தின்று இளைப்பாறுகிறது
அந்த குதிரை என் தலையணையில்
..................................................(இன்னும் வரும்)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |