google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்-4

Tuesday, July 23, 2013

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்-4

(குறிப்பு- இங்கே மேலும் இயற்கை அழகு மிளிரும் பாஷோவின் சில  ஹைக்கூ கவிதைகள் தமிழில் எனது கவிதை நடையில்.........)

பாஷோவின் கவிதைகளில் தனிமை படுத்தப்பட்ட இயல்பு இருக்காது ஆனால் ஆழமான  உள்ளுணர்வு இருக்கும்  ஹைக்கூ கவிதைகளின் சிறப்பே அதை நேசிக்கும் வாசிக்கும் அவரவர் எண்ணம் என்ன சொல்கிறதோ அதுவே அதன் அர்த்தமாகிறது........The Surveyor’s Hand  கவிதைத் தொகுப்பின் கவிதாயினியும்  பள்ளிக்கூட ஆசிரியை யுமான Anne Whitehouseதனது வகுப்பறையில் பாஷோவின் கவிதை ஒன்றை படித்த பின்பு ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு விளக்கங்கள் சொல்ல....அறிந்துகொண்டது.


அந்தக் கஞ்சா செடியில்
கிழிந்த ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறகு
எதையோ ஞாபகப் படுத்துகிறது.


அந்தச் சாலையின் மீது
யாரும் பயணிக்கவில்லை
இலையுதிர் கால இரவின் தொடக்கம்

http://s1.hubimg.com/u/5784892_f496.jpg

மலைரோஜாக்களின் இதழ்கள்
அப்போதும் இப்போதும் வீழ்ந்திடுமா
நீர்வீழ்ச்சியின் ஓசைக்கு...?


மலைப்பகுதி  வயல்வெளியில்
பூச்சாண்டி பொம்மை
நல்ல பயன்


கல்லறையைக் குலுக்குகிறது
என் அழுகைக் குரல்
இலையுதிர்காலக் காற்றால்.

http://voodoochains.img.jugem.jp/20130529_559807.jpg

 
குதிரையின் மீதமர்ந்து குட்டித்தூக்கம்
தூரத்து நிலவின் தொடரும் கனவு 
சூடான நீராவியுடன் தேநீர்

ஆன்மாக்களின் திருவிழா
இன்றும்  புகைச்சல் 
சுடுகாட்டிலிருந்து 

வசந்த மழை
கூரை வழியாகக் கசிவு
சொட்டும் குளவிக் கூடு 


http://www.markmcguinness.com/wp-content/images/hiroshige_bridge.JPG  
விடுதியில் தங்குவதும் 
அங்கே விலைமாதர்களுடன் தூங்குவதும் 
தரிசுப்புல் திண்டும் நிலவும்  

ஒரு குட்டித்தூக்கம் 
அடிக்கல் நாட்டுவது போன்று 
குளிர் சிறைக்கு எதிராக 

கீரை சாலட்டில் கிடந்த 
மணலைக் கடித்த பற்களின் கூச்சம் 
வயோதிகம் வந்த நினைவு

http://raysweb.net/haiku/images/basho.jpg
 
வாழைமரத்தின் 
காற்றில் கிழிந்த இலைகளிலிருந்து 
வாளியில் கொட்டும் மழைத்துளிகள் 

அந்தப் பட்டாம்பூச்சி மணக்கிறது 
அதன் இறக்கைகளில் வாசனை 
மந்தாரை மலர்கள் 

அந்தத் தும்பி 
தரையிறங்க முடியாது 
புல் என்ற கத்தி மீது.

http://farm5.staticflickr.com/4138/4936925629_5265794069_z.jpg
 
முதல் பனியில் 
செவ்வந்திச் செடியின் இலைகள்
ஒட்டி வளைந்தன 

அதிகாலைப் பெருமிதம் 
பழைய வேலியிட்ட 
கோட்டைவாயிலில் மலர்ந்தது.

வசந்தம் கடக்கின்றது....
துக்கத்தில். பறவைகள்
கண்ணீர் சிந்தும் கண்களோடு மீன்கள்

மஞ்சள் மலைரோஜாவின்
இதழ்களில் நடுக்கம்-
நீர்வீழ்ச்சியின் கர்ஜனை

அந்த மீன் வியாபாரியின் குரல்
கலந்தது
குயிலின் குரலோடு

http://fwallpapers.com/files/imagecache/psp/images/beautiful-nature-692.jpg  
மூங்கில் காட்டில் மறைந்திருந்த
பனிப்புயல்
அமைதியை விரட்டியது.

அந்தப் பழைய கிராமத்தில்
ஒரு வீடுகூட....
ஈச்சமரங்கள் இல்லாமல் இல்லை

என் மரக்கூரையின் கீழ்
ஏப்ரல் மழையின் தனித்தனி சொட்டுகள்
வரையும் கோடுகள்

ஒரு சிறந்த போர்வீரனின்
காலி தலைக் கவசத்திலிருந்து 
ஒரு வெட்டுக்கிளி பாடுகிறது

கோடை புற்கள்
துணிச்சலான வீரர்களின்   

மிச்சமுள்ள கனவுகள்

http://www.julespretty.com/Images/nature%20notes/basho%20and%20mountain.jpg  
குளிர்காலத் தோட்டத்தில் 
தேய்ந்துபோன நிலவை 
பூச்சிகள் பாடுகின்றன 

இங்கே எனக்குப் பிடித்த சில பாஷோவின் கவிதைகள் முடிந்தவரை கவிதை நயத்துடன் என் மொழியாக்கத்தில் படைத்தேன்

அடுத்து வருவது.................கோபயாஷி இஸ்ஸாவின் ஹைக்கூ கவிதைகள்  
                                            
                                                                    ................................(இன்னும் வரும் )

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1