(குறிப்பு- இங்கே மேலும் இயற்கை அழகு மிளிரும் பாஷோவின் சில ஹைக்கூ கவிதைகள் தமிழில் எனது கவிதை நடையில்.........)
பாஷோவின் கவிதைகளில் தனிமை படுத்தப்பட்ட இயல்பு இருக்காது ஆனால் ஆழமான உள்ளுணர்வு இருக்கும் ஹைக்கூ கவிதைகளின் சிறப்பே அதை நேசிக்கும் வாசிக்கும் அவரவர் எண்ணம் என்ன சொல்கிறதோ அதுவே அதன் அர்த்தமாகிறது........The Surveyor’s Hand கவிதைத் தொகுப்பின் கவிதாயினியும் பள்ளிக்கூட ஆசிரியை யுமான Anne Whitehouseதனது வகுப்பறையில் பாஷோவின் கவிதை ஒன்றை படித்த பின்பு ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு விளக்கங்கள் சொல்ல....அறிந்துகொண்டது.
அந்தக் கஞ்சா செடியில்
கிழிந்த ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறகு
எதையோ ஞாபகப் படுத்துகிறது.
அந்தச் சாலையின் மீது
யாரும் பயணிக்கவில்லை
இலையுதிர் கால இரவின் தொடக்கம்
மலைரோஜாக்களின் இதழ்கள்
அப்போதும் இப்போதும் வீழ்ந்திடுமா
நீர்வீழ்ச்சியின் ஓசைக்கு...?
மலைப்பகுதி வயல்வெளியில்
பூச்சாண்டி பொம்மை
நல்ல பயன்
கல்லறையைக் குலுக்குகிறது
என் அழுகைக் குரல்
இலையுதிர்காலக் காற்றால்.
குதிரையின் மீதமர்ந்து குட்டித்தூக்கம்
தூரத்து நிலவின் தொடரும் கனவு
சூடான நீராவியுடன் தேநீர்
ஆன்மாக்களின் திருவிழா
இன்றும் புகைச்சல்
சுடுகாட்டிலிருந்து
வசந்த மழை
கூரை வழியாகக் கசிவு
சொட்டும் குளவிக் கூடு
விடுதியில் தங்குவதும்
அங்கே விலைமாதர்களுடன் தூங்குவதும்
தரிசுப்புல் திண்டும் நிலவும்
ஒரு குட்டித்தூக்கம்
அடிக்கல் நாட்டுவது போன்று
குளிர் சிறைக்கு எதிராக
கீரை சாலட்டில் கிடந்த
மணலைக் கடித்த பற்களின் கூச்சம்
வயோதிகம் வந்த நினைவு
வாழைமரத்தின்
காற்றில் கிழிந்த இலைகளிலிருந்து
வாளியில் கொட்டும் மழைத்துளிகள்
அந்தப் பட்டாம்பூச்சி மணக்கிறது
அதன் இறக்கைகளில் வாசனை
மந்தாரை மலர்கள்
அந்தத் தும்பி
தரையிறங்க முடியாது
புல் என்ற கத்தி மீது.
முதல் பனியில்
செவ்வந்திச் செடியின் இலைகள்
ஒட்டி வளைந்தன
அதிகாலைப் பெருமிதம்
பழைய வேலியிட்ட
கோட்டைவாயிலில் மலர்ந்தது.
வசந்தம் கடக்கின்றது....
துக்கத்தில். பறவைகள்
கண்ணீர் சிந்தும் கண்களோடு மீன்கள்
மஞ்சள் மலைரோஜாவின்
இதழ்களில் நடுக்கம்-
நீர்வீழ்ச்சியின் கர்ஜனை
அந்த மீன் வியாபாரியின் குரல்
கலந்தது
குயிலின் குரலோடு
மூங்கில் காட்டில் மறைந்திருந்த
பனிப்புயல்
அமைதியை விரட்டியது.
அந்தப் பழைய கிராமத்தில்
ஒரு வீடுகூட....
ஈச்சமரங்கள் இல்லாமல் இல்லை
என் மரக்கூரையின் கீழ்
ஏப்ரல் மழையின் தனித்தனி சொட்டுகள்
வரையும் கோடுகள்
ஒரு சிறந்த போர்வீரனின்
காலி தலைக் கவசத்திலிருந்து
ஒரு வெட்டுக்கிளி பாடுகிறது
கோடை புற்கள்
துணிச்சலான வீரர்களின்
மிச்சமுள்ள கனவுகள்
குளிர்காலத் தோட்டத்தில்
தேய்ந்துபோன நிலவை
பூச்சிகள் பாடுகின்றன
இங்கே எனக்குப் பிடித்த சில பாஷோவின் கவிதைகள் முடிந்தவரை கவிதை நயத்துடன் என் மொழியாக்கத்தில் படைத்தேன்
அடுத்து வருவது.................கோபயாஷி இஸ்ஸாவின் ஹைக்கூ கவிதைகள்
................................(இன்னும் வரும் )
பாஷோவின் கவிதைகளில் தனிமை படுத்தப்பட்ட இயல்பு இருக்காது ஆனால் ஆழமான உள்ளுணர்வு இருக்கும் ஹைக்கூ கவிதைகளின் சிறப்பே அதை நேசிக்கும் வாசிக்கும் அவரவர் எண்ணம் என்ன சொல்கிறதோ அதுவே அதன் அர்த்தமாகிறது........The Surveyor’s Hand கவிதைத் தொகுப்பின் கவிதாயினியும் பள்ளிக்கூட ஆசிரியை யுமான Anne Whitehouseதனது வகுப்பறையில் பாஷோவின் கவிதை ஒன்றை படித்த பின்பு ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு விளக்கங்கள் சொல்ல....அறிந்துகொண்டது.
அந்தக் கஞ்சா செடியில்
கிழிந்த ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறகு
எதையோ ஞாபகப் படுத்துகிறது.
அந்தச் சாலையின் மீது
யாரும் பயணிக்கவில்லை
இலையுதிர் கால இரவின் தொடக்கம்
மலைரோஜாக்களின் இதழ்கள்
அப்போதும் இப்போதும் வீழ்ந்திடுமா
நீர்வீழ்ச்சியின் ஓசைக்கு...?
மலைப்பகுதி வயல்வெளியில்
பூச்சாண்டி பொம்மை
நல்ல பயன்
கல்லறையைக் குலுக்குகிறது
என் அழுகைக் குரல்
இலையுதிர்காலக் காற்றால்.
குதிரையின் மீதமர்ந்து குட்டித்தூக்கம்
தூரத்து நிலவின் தொடரும் கனவு
சூடான நீராவியுடன் தேநீர்
ஆன்மாக்களின் திருவிழா
இன்றும் புகைச்சல்
சுடுகாட்டிலிருந்து
வசந்த மழை
கூரை வழியாகக் கசிவு
சொட்டும் குளவிக் கூடு
விடுதியில் தங்குவதும்
அங்கே விலைமாதர்களுடன் தூங்குவதும்
தரிசுப்புல் திண்டும் நிலவும்
ஒரு குட்டித்தூக்கம்
அடிக்கல் நாட்டுவது போன்று
குளிர் சிறைக்கு எதிராக
கீரை சாலட்டில் கிடந்த
மணலைக் கடித்த பற்களின் கூச்சம்
வயோதிகம் வந்த நினைவு
வாழைமரத்தின்
காற்றில் கிழிந்த இலைகளிலிருந்து
வாளியில் கொட்டும் மழைத்துளிகள்
அந்தப் பட்டாம்பூச்சி மணக்கிறது
அதன் இறக்கைகளில் வாசனை
மந்தாரை மலர்கள்
அந்தத் தும்பி
தரையிறங்க முடியாது
புல் என்ற கத்தி மீது.
முதல் பனியில்
செவ்வந்திச் செடியின் இலைகள்
ஒட்டி வளைந்தன
அதிகாலைப் பெருமிதம்
பழைய வேலியிட்ட
கோட்டைவாயிலில் மலர்ந்தது.
வசந்தம் கடக்கின்றது....
துக்கத்தில். பறவைகள்
கண்ணீர் சிந்தும் கண்களோடு மீன்கள்
மஞ்சள் மலைரோஜாவின்
இதழ்களில் நடுக்கம்-
நீர்வீழ்ச்சியின் கர்ஜனை
அந்த மீன் வியாபாரியின் குரல்
கலந்தது
குயிலின் குரலோடு
மூங்கில் காட்டில் மறைந்திருந்த
பனிப்புயல்
அமைதியை விரட்டியது.
அந்தப் பழைய கிராமத்தில்
ஒரு வீடுகூட....
ஈச்சமரங்கள் இல்லாமல் இல்லை
என் மரக்கூரையின் கீழ்
ஏப்ரல் மழையின் தனித்தனி சொட்டுகள்
வரையும் கோடுகள்
ஒரு சிறந்த போர்வீரனின்
காலி தலைக் கவசத்திலிருந்து
ஒரு வெட்டுக்கிளி பாடுகிறது
கோடை புற்கள்
துணிச்சலான வீரர்களின்
மிச்சமுள்ள கனவுகள்
குளிர்காலத் தோட்டத்தில்
தேய்ந்துபோன நிலவை
பூச்சிகள் பாடுகின்றன
இங்கே எனக்குப் பிடித்த சில பாஷோவின் கவிதைகள் முடிந்தவரை கவிதை நயத்துடன் என் மொழியாக்கத்தில் படைத்தேன்
அடுத்து வருவது.................கோபயாஷி இஸ்ஸாவின் ஹைக்கூ கவிதைகள்
................................(இன்னும் வரும் )
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |