அன்று
இளவரசன்-திவ்யா காதல்...
விவாதம் ...
திவ்யாவின் தந்தை இறப்பு....
கலவரம்.....
இடையில் என்ன நடந்ததோ...?
கசப்பு....வழக்கு...
தீர்ப்பு வரவில்லை...
ஆயினும்
இளவரசன் இறப்பு...
இது யார் கொடுத்த தீர்ப்பு....?
அவரே அவருக்கு
எழுதிக்கொண்டதா...?
அல்லது
எந்த சாதிக் கடவுளும்
யாருக்கும் தெரியாமல்
எழுதிச் சென்றாரா...?
ஆனால்
ஓன்று மட்டும் வெளிச்சம்.....
ஒரு காதல் சாதீயில் கருகியது.
ஆத்திரமும்...
அவசரமும்....
ஆகப்போவது
ஒன்றுமில்லை
இன்னும் நாம்
காட்டிசம் நோயால்
பாதிக்கப்பட்ட
காட்டு மனிதர்கள்
வாழும் சமுதாயத்தில்
வாழும் மனிதர்கள்.....
என்பதின் அடையாளமே
இந்த அக்கிரமங்கள்...
அடையாளங்கள்
மாறப்போவதில்லை
அவமானங்கள்
தீரப்போவதில்லை
இவைதானே
அரசியல்வாதிகளின்
அன்றாட தீவனம்
வேடதாரிகளின்
விரும்பும் தீயவனம்.....
சாதி-
சமுதாயத்தின்
வியாதி
காதல் மட்டுமே
அதற்கு மருந்தல்ல..
காதலர்களே! காதலர்களே!
கொஞ்சம் கேளிர்!
...................பரிதி.முத்துராசன்
நன்றி.....................

தர்மபுரி இளவரசன் திவ்யா காதல் திருமணத் தொடர்ந்து நடைபெற்றுவரும் அசம்பாவிதங்கள் நமது சமூகத்திற்கு வெட்கத்தை ஏற்படுத்துபவை. இவற்றை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் : பகவான் சிங், மூத்த பத்திரிகையாளர்...
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |