(தீர்ப்பு-இது காமெடியில் சர்க்கஸ் யானை...காதலில் மன்மத யானை...அதிரடிச் சண்டையில் காட்டு யானை...ஆக மொத்தத்தில் நல்லாவே பட்டையக் கிளப்புது இந்தப் பட்டத்து யானை.....)
படம் ஆரம்பமே சந்தானத்தின் அதிரடி காமெடிச் சரவெடியில் அரங்கமே அதிருது...அப்புறம் ஒரு குத்துப்பாட்டோடு விஷாலின் அறிமுகம் இயக்குனர் பூபதி பாண்டியன் நல்ல சமையல்காரர் போன்று காதல்+காமெடி+அதிரடி என்று எல்லாம் அளவாக கலந்து படைத்த கல்யாண சமையல் சாதம்.
கதை-ஒரு சாதாரணமான வாலிபன் விஷால் தான் சூழ்நிலையால் எதிர்கொள்ளும் உயிருக்கு வரும் சவாலான சந்தர்பங்களை வெற்றிக்கொள்வது என்பதே...அதை மிக்கி-மவுஸ் படம் போல் சொல்கிறது
காரைக்குடியில் கௌரவம்(சந்தானம்) என்ற கல்யாண சமையல்காரரிடம் சரவணன் (விஷால்) அவரது நான்கு நண்பர்களுடன் வேலைக்கு சேர்வதில் ஆரம்பிக்கும் படம்...உள்ளூர் கடா முருகன் என்ற காமெடி ரவுடியிடம் ஏற்பட்ட மோதலால் கௌரவம் காரைக்குடியைக் காலிசெய்துவிட்டு விஷால் குழுவினருடன் திருச்சிக்கு ஓட்டல் ஆரம்பிக்க வரும்போது....விஷால் பணத்தை பஸ்ஸில் ஐஸ்வர்யா(ஐஸ்வர்யா அர்ஜுன்) என்ற அழகான மாணவியைப் பார்த்து ஜொள்ளுவிட்டு தொலைத்துவிட...
அங்கே திருச்சியிலும் மன்னாரு-காசி என்று இரண்டு ரவுடிகள் அட்டகாசம் அதில் மான்னாரு என்ற அதி பயங்கரமான..அதேநேரம் அடி முட்டாள் காமெடி வில்லனும் ஐஸ்வர்யாவை லவுட்டிக்கொண்டு போய் கல்யாணம் செய்ய நினைக்கும் போது.....ஒரு பிளாஸ்பேக்...மதுரையில் சரவணனைப் பற்றியது.
மதுரையிலிருந்து அண்ணாச்சி என்ற ஒரு பயங்கரமான பணக்கார-அரசியல் ரவுடியும் தன் மகனைக் கொன்ற சரவணனைத் தேடி வந்து மன்னாருடன் இணைந்து சரவணனைக் கொல்ல தேடுவதும்....
ஆக...சாதாரண சரவணனுக்கு தன் காதலியையும் மன்னாரிடமிருந்து காப்பாற்ற வேண்டும் தன்னைப் பழிவாங்க நினைக்கும் அன்னாச்சியையும் எதிர்கொள்ள வேண்டும்...இப்படி தலையாயக் கடமை அவர் வென்றாரா...? ஐஸ்வர்யா அடைந்தாரா...? கௌரவம் ஓட்டல் திறந்தாரா...? என்பதுதான் கதை.
விஷால்-பட்டத்து யானையில் காதல்+காமெடி+அதிரடி என்று மூன்று பரிணாமங்களில் தன் நடிப்பைக் காண்பிக்கின்றார்....சந்தானத்துக்கு ஈடுகொடுத்து நகைச்சுவையில் முன்னணிவகிக்கிறார்...அதிரடி சண்டைக்காட்சிகளில் அவர் நடிப்பு தெரிந்ததுதானே...சண்டைக்கோழி. காதலில் நெளிவு-சுளிவு நளினம் அதிகமாகவே தெரிகிறது..
ஐஸ்வர்யா அர்ஜுன்- நடிப்பில் புதுமுகம் வாடை இல்லை...பாடல்களில் தூள் கிளப்பும் அம்மணி பள்ளிமாணவி வேடத்துக்கு நன்றாகவேப் பொருந்துகிறார்...(அண்ணேன்..என்ன வகுப்புனு கண்டுபுடிச்சிட்டேன்...+2 பரிஷ்ஷை எழுதப் போகுது..ஹி.)
அம்மணியைப் பார்த்தால் ஆரம்பப் படங்களில் வந்த அஞ்சலி போன்று ஒல்லிபீச்சானியாக..ஒடிந்து விழுவது போல் இருக்கிறார்...ரொம்ப மென்மை...உண்மை ..ஆக்க்ஷன் கிங்கிடம் உள்ள முறைப்பு இல்லை...
அட..விடுங்கப்பா...பாவம் அதுவே புடலங்காய் மாதிரி இருக்கு... இழுத்துப் புடிச்சி கைய ஓடிச்சிடாதிங்ககப்பா...அய்யாமார்களே..ஆங்..
(அம்மணி..எதுக்கும் அஞ்சலியிடம் ஆலோசனை கேட்டு..ஓடிப்போவதற்கு அல்ல...உடம்பைத் தேத்து...இல்லைனா இங்க இல்ல உனக்கு பாலிவுடில் நல்ல எதிர்காலம் இருக்கு...எங்க ஆட்கள் குண்டு இட்லிதான் விரும்பி திம்பாயிங்க...)
சந்தானம்-இந்தப்படமும் சந்தானத்தில் தலையில்தான் நிற்கிறது...ரவுடி கடாமுருகனை போலிஸ் கைது செய்துகொண்டு போகும்போது கலாய்ப்பதிலாகட்டும்... ஓட்டலில் பணமில்லாமல் தின்றுவிட்டு வாயில் பெட்ரோல் ஊற்றி ஓட்டல் முதலாளியை விரட்டுவதிலாகட்டும்...இடையில் கொஞ்ச நேரம் காணாமல் போனாலும் கடைசியில் அவரே கலகலப்பு ஊட்டுகிறார்.
மயில்சாமி,பட்டிமன்றம் ராஜா,சீதா..இப்படி நிறையப் பேர் நடித்திருந்தாலும் மயில்சாமியும் அவரது திருடன் கதாப்பாத்திரமும் சிறப்பு......சிரிப்பு...அவருக்குதான் கானா பாலா பூசணிக்காய் பாட்டு..கலக்குறார் நல்லாவே டான்ஸ் போட்டு.
இசை எஸ்.தமன்...என்ன ஒரு என்ன ஒரு...பாடலும் கானா பாலா பாடிய பூசணிக்காய்...பாடலும் கேட்பதுபோல் உள்ளது..பின்னணி இசை பெரிதாக இல்லை...அப்படித்தான் ஒளிப்பதிவும் சொல்வதுபோல் இல்லை
thanks-YouTube-

இன்னும் நிறைய காட்சிகள் படத்தில் இருக்கு சிரிப்பதற்கு...சோடா பாட்டலில் குண்டூசி நிரப்பி வீசுவது...பீர் பாட்டலில் ஆணி நிரப்பி எறிவது..இப்படி புதுப் புது சிரிப்பு டெக்னிக் சண்டை ஆயுதங்கள் கண்டுபிடித்த..அண்ணன் பூபதி பாண்டியனை எப்படி பாராட்டுவது தெரியவில்லை...கொலைக் காட்சிகள் கூட கொடூர வன்முறையாக இல்லை ( அண்ணேன்.. எல்லாம் நேரம் படமும் சூது கவ்வும் படமும் வெற்றிபெற்ற பாதிப்பு இன்னும் கொஞ்ச நாளைக்கு வர்ர படங்கள்ல வில்லன்கள் எல்லாம் காமெடித்தான் செய்வாயிங்க போல...)
ஆக மொத்தத்தில் ...பட்டத்து யானை நல்லப் பொழுது போக்கு படம்...சிங்கம் போல் சீறிப் பாயாவிட்டாலும்.. படுக்காது வெற்றி உலா வரும்
அண்ணேன்..
ஐஸ்வர்யா அம்மணியைப் பார்த்து
யாரோ ஒரு பெரியப் பதிவரு
கவர்ச்சியைக் காணோம்னு சொல்லிப்புட்டாரே...உண்மையா...?
அப்படியா...?
அப்படியொன்றும் தெரியலேயே...
போகப் போகத் தேறிடும்
(thanks-to google.co.in for the above images...some images with pc mouse hover effect..sorry for the inconvenience to some browsers and mobile readers)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |