தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காதது...... அதே போன்று அவரது ஒவ்வொரு படத்திலும் அவர் எப்படி தோன்றுவார்...? அவரது கதாப்பாத்திரம் எப்படியிருக்கும்...? என்று அவரது ரசிகர்களாலும் தீர்மானிக்க முடியாதது
பிட்சா படத்தில் பேய்,பிசாசுக்கு பயப்படும் டெலிவரி பாய் மைக்கேல் கார்த்திகேயனாக வந்து மிகைப்படாமல் நடித்த விஜய் சேதுபதி.
நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தில் கல்யாணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு விளையாடும் போது கீழேவிழுந்து தலையில் அடிபட்டு அம்னேசியா மெமோரி லாஸ் பிரேம் குமாராக நடித்து கலகலப்பு ஊட்டினார்
ஆனால் அதே விஜய சேதுபதி சூது கவ்வும் படத்தில் பிழைப்புக்காக சிறு சிறு ஆட்கடத்தல் செய்யும் நடுத்தர வயது தாஸ் வேடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக வந்தாலும் தனது வேறுபட்ட நடிப்பால் வெகுவாக பேசப்பட்டார்
அப்படித்தான் மூன்று கதைகள் கொண்ட இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் சுமாரான கதையான சுமார் மூஞ்சி குமார் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து எல்லோரையும் சிரிக்க வைத்து தனித்துவமாக மிளிர்கிறார்.....
இப்படி யாரும் எதிர் பார்க்காத வித்தியாசமான வேடங்களில் நடித்தும் தனக்கென்று கதாநாயக இமேஜ் வேண்டும் என்று நினைக்காமல் மற்றவர்களுடன் இணைந்தும் நடித்து வரும் விஜய் சேதுபதி விரைவில் வரவிருக்கும் ரம்மி-யில் அவரது கதாப்பாத்திரம் எப்படிப் பட்டது?அவர் என்ன மாதிரி தோற்றத்தில் வருவார்...? என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துவிட்டார்
கசிந்து வரும் தகவல் படி....ரம்மியில் அவர் தனது பழைய துருபிடித்த..... அழுக்கு படிந்த சுமார் மூஞ்சி குமாரு தோற்றத்தை மாற்றிக்கொண்டார் என்று சொல்லும் ரம்மி இயக்குனர்........
ரம்மியில் விஜய் சேதுபதிக்கு ஐஸ்வர்யா & காயத்திரி என்று இரண்டு கதாநாயகிகள் என்றும் சிறந்த கதையும் கதாப்பாத்திரம் மட்டும் என்றாலே விஜய் சேதுபதி தேர்வு செய்து நடிப்பார் அந்த வகையில் இது 1980-களில் சிவகங்கை பகுதியில் நடந்த உண்மை சம்பவம் பற்றிய திரைப்படம் என்றும் கூறுகிறார்....
அண்ணேன்...இன்னொரு குட்டிப்புலி-யா? என்று கேட்க தோன்றினாலும் இது முழுக்க முழுக்க காதல் திரைப்படம் என்கிறார் ரம்மி இயக்குனர்
thanks-YouTube-by vikatanwebtv
பிரபாகர்,சூரி ஆகியோருடன் முக்கியப் பாத்திரங்களில் ரம்மி படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி தனது வித்தியாசமான நடிப்பால் இப்படத்திலும் நம்மை ஏமாற்றாமல் இருந்தால் சரிதான்.
(ஆமாம் அண்ணேன்...இப்போதெல்லாம் திரையரங்குக்கு போனால் நம்ம காசையும் பிடுங்கிக்கொண்டு நம்ம பொன்னான பொழுதுபோக்கு நேரத்தையும் பாழடித்து விடுறாயிங்க....இந்த சைக்கோ சினிமா வியாதிக்காரங்க.....ச்சே)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |