நடிகர் விஜய் புது கட்சி ஆரம்பித்து தீவிரமாக அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அதனால் அவர் தனது ரசிகர்களை அழைத்து ஆலோசனை செய்ததாகவும் ஒரு நாளிதழில் வந்த செய்தி வதந்தி என்று இன்று அவசர அவசரமாக மறுப்பு அறிவிக்கை விடுக்கின்றார்.....
நான் வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிக்க வேண்டும் என்று இரவு பகலாக சினிமா சினிமா என்று இருக்கின்றேன் இப்போதும் எப்போதும் தான் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவே இந்த ஊடகங்கள் தனக்கு எதிராக செய்யும் சதியை நம்பவேண்டாம் என்று சொல்கிறார்....
ஆயினும் இவரது கடந்த கால நடவடிக்கைகள் சொல்வதென்ன....?
காவலன் படத்தில் அவரது அசூர வளர்ச்சியை தடுக்க நினைத்த அன்றைய ஆளும் கட்சி அரசியல்வாதிகளை எதிர்த்து தேர்தல் காலங்களில் இவரும் இவரது ரசிகர்கள் இயக்கமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும்......சினிமா என்பதிலிருந்து தடம் புரண்டு அரசியலில் ஈடுபட்டதும் நாம் அறிவோம்...
இன்றைய ஆளும் கட்சிக்கு ஆதரவாக அவரது அன்றைய நடவடிக்கைகள் இருந்ததும் அவரது வளர்ச்சி என்றும் தனக்கும் ஆபத்தாக வரலாம் என்று இன்றைய ஆளும் அரசியல்வாதிகள் நினைத்ததாலா...? அல்லது எதனாலோ அவரது தலைவா படம் பல தர்மச் சங்கடங்களை சந்தித்ததும் நடந்து முடிந்த நிகழ்வு....
சினிமாவாதிகள் தங்கள் சுயநலத்திற்காக தங்களது புதுப்படங்கள் வெளிவரும் காலகட்டங்களில் தங்கள் ரசிகர்கள் ஆதரவுடன் மக்கள் மத்தியில் ஒரு பிரமாண்டத்தை உருவாக்க நினைப்பதும் அதற்கு ஊடகங்களை அவர்கள் பயன் படுத்துவதும் இன்று நேற்று அல்ல காலம் காலமாக நடந்து வரும் நடைமுறை........இது தமிழ்நாட்டின் தலை...எழுத்து
இன்று இவர்கள் நல்லவர்களாகவும் ஊடகங்கள் தவறு செய்வதாகவும் சொல்லுவது..........என்னத்தச் சொல்வது?
ஊடகங்கள் தங்கள் வயிற்றை நிரப்ப இப்படித்தான் எதையாவது விழுங்குவார்கள்...பிறகு வாந்தி எடுப்பார்கள்
நீங்கள் உண்மையானவராக இருந்தால் ஊடகங்கள் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும் உங்களுக்கு ஏன் பயம்...?
இதே சினிமாத்துறையில் எத்தனையோ நடிகர்கள் நடிப்பு ஒன்றே குறிக்கோளாக சிங்க நடை போடுவதும் இன்னும் சிலர் சினிமாவில் மட்டுமே மங்காத்தா விளையாடுவதும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்
முன்பு அரசியலைத்தான் சாக்கடை என்பார்கள் இப்போது சினிமாவும் பெரிய சாக்கடையாகிவிட்டது........இரண்டுமே நடிப்பை மூலதானமாக வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்

ரசிகர்களையும், மக்களையும் குழப்ப வேண்டாம்: விஜய்
#இணையத்தில் இமயத்தைகிழிக்கும் இணையில்லா வெற்றின்னு ஒங்க ரசிக கண்மணிகள் தான் கன்பியூஸிங்.

ரசிகர்களையும், மக்களையும் குழப்ப வேண்டாம்: விஜய்
#நான் ஒளறல ஒளறலண்ணா
ரொம்ப பீலிங்கு பீலிங்குண்ணா!!!"

நான் ரசிகர்மன்ற நிர்வாகிகளையும் சந்திக்கலை, அரசியலும் பேசலை -விஜய் # சத்தியமா நான் ஊமைங்க!

ரசிகர்களையும், மக்களையும் குழப்ப வேண்டாம்: விஜய் # ரசிகர்களா.... பிம்பிளாக்கி .... பிளாப்பி .......

ரசிகர்களையும், மக்களையும் குழப்ப வேண்டாம்: விஜய் #முதல்ல நீங்க தெளிவா இருக்கீங்களாண்ணா?

csk தோத்தாலும் india தோத்தாலும் விஜய்தான் காரணம்னு ஒருத்தன் மூஞ்சிபுக் ல சொல்ற்றன்

கடவுளை மட்டுமே நம்பும் பல
நடிகர்கள் மத்தியில் ,
தன் ரசிகர்களை நம்பும் ஒரே தலைவன்..
#இளையதளபதி_விஜய்!

ட்விட்டர்ல விஜய் ரசிகர்னு சொல்லிட்டு திரியுற பாதி பேரு அந்தாள அடிவாங்க விட்டுட்டு வேடிக்கை பாக்கிறவங்கதான்;-))

விஜய் சீரியஸாக படங்களில் நடித்துகொண்டிருக்க அவரை காலிசெய்வதற்கு அரசியல்என்ட்ரி,ஆலோசனைன்னு தகவல்களை ஒருகும்பல் பரப்பிகிட்டிருக்கு!

அரசியல் ஆலோசனை நடத்தவே இல்லை-விஜய் #இல்ல, நம்பாதிங்க..கேமரா பயத்தில் நடுங்கும் ஆதவன் வடிவேலு நிலைமை, பாவம்.

'இல்ல இல்ல... நான் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கல, அரசியல் பேசல!' - விஜய் # ஏன்... சும்மா.. பேசித்தான் பாருங்களேன்:-)
எதையும் கண்டும் காணாமல் இருப்பதுதான் இன்றைய அரசியல்-சினிமா இரண்டிலும் ஆரோக்கியமான செயலா.....? அல்லது இதுபோல் மறுப்பு அறிவிக்கை கொடுப்பது நல்லதா....? என்று நமக்கும் குழப்பம்
அது சரி....எல்லாம் தெரிந்த பதிவுலக நியாயன்மார்களே! உங்கள் பார்வையில்..............
நடிகர் விஜய் சொல்வது சரியா?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |