google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இரண்டாம் உலகம்-நான் செல்வராகவன் பேசுகிறேன்

Saturday, November 23, 2013

இரண்டாம் உலகம்-நான் செல்வராகவன் பேசுகிறேன்
















(குறிப்பு-சிங்கம்-2, விஸ்வரூபம்-2, பிட்சா-2.....என்று தொடர் சினிமாக்கள் வரும்போது ஏன் விமர்சனமும் பார்ட்-2 எழுதக்கூடாது...? இது இரண்டாம் உலகம்-சினிமா விமர்சனம் (பார்ட்-2). ஒரு வித்தியாசமான கற்பனைப் பதிவு   

Made with .freeonlinephotoeditor.com
 
இரண்டாம் உலகம்-
நான் செல்வராகவன் பேசுகிறேன்   

ஏழு வருடமாக கனவுகண்டு இரண்டு வருடமாக கஷ்டப்பட்டு 60 கோடி செலவு செய்து ஒரு காதல் கற்பனை உலகத்தை பிரேசில் காடுகளில் அலைந்து திரிந்து தொன்மையான ரியோ நகரத்தையும் குளுகுளு கோவா கடற்கரையையும் சுட்டுக்கொண்டு வந்து படம் காட்டினால் அம்பதோ நூறோ கொடுத்துவிட்டு பாப்கானை நொறுக்கிக்கொண்டு என்ன படம்யா....? என்று விக்கலும் நக்கலுமாய்  லொல்லு பேசும் சினிமா விமர்சகர்களே......


 
இப்படி உபத்திரமாக எழுதும் உங்களுக்கு சினிமாவில் உலகத் தரம் என்றால் என்ன தெரியும்...? ஹோலிவுட்டில்  ஜேம்ஸ் கேமரோன் அவதார் படம் என்று சில காட்டுப்பூச்சிகளை காட்டினால் ஆகா ஓகோ என்று பாராட்டும் நீங்கள் அதே கிராபிக்ஸில் நான் ஒரு பறக்கும் சிங்கத்தைக் காட்டினால் .....
ஒருத்தரு எழுதுராருப்பா நான் கடவுள் ராஜேந்திரனுக்கு மேக்கப்  போட்டு நடிக்கவிட்டு இருந்தா நல்லா இருக்கும்னு....இன்னொருத்தரு சொல்லுறாரு அவதார் படத்தில  கழிச்சிப் போட்ட பெரிய பறவைகள் அங்கே இங்கே பறக்குதுன்னு....ஏம்பா விமர்சகர் தம்பிகளா...கற்பனை உலகத்தில நான் கொக்கு ஈமு கோழியையுமா காட்டமுடியும்....?

irandamulagam

 
கண்ணா மூணு லட்டு தின்ன  ஆசையா...? னு நான் மூணு அனுஷ்கா...லட்டுக்களை காட்டியிருக்கிறேன் கண்ணா...அதலாம் உங்க  கண்ணுக்கு தெரியலையா....?

அப்புறம் நிஜ உலகத்தில ஒரு நாயை எப்படி நடிக்க வச்சியிருக்கிறேன்..அட..நா உண்மையான நாயைத்தான் சொல்லுறேன்... ரம்யா புல்தடுக்கி விழுந்து செத்தப் பிறகு தாடியோட ஆர்யா அலைவாரே அப்போ ஒரு நாய் வந்து அவரை அழைச்சிட்டு போய்..சுத்தி சுத்தி குறைக்கும் அது எவ்வளவு பெரிய சிம்பாலிஸ்ம்...குறீயீடு.......

அப்புறம் எந்த ஆசீர்வாத கூடத்துக்குப் போகாமலேயே மதுவோட அப்பா பக்கவாதத்தில கை விளங்காம குண்டி கழுவ முடியாம கிடந்தவரு ஹோண்டா ஆக்டிவா ஒட்டிக்கிட்டு வர்ர சீன் வச்சியிருக்கேன்...... எவ்வளவு பெரிய மிராக்கில்  பின்னாடி வருதுன்னு சிம்பாலிக்கா காட்டியிருக்கேன் அதையும் யாரும் பேசுறதில்ல 



 
அத்த உட்டுப்புட்டு ஒருத்தர் எழுதுறார்...........

"இதனால் இந்த படத்திற்கு அடுத்த பாகம் வருவதற்காக சூழ்நிலைகள் தெரிகிறது. மக்களே உஷாராகிக்கவும்".

"இந்த காவியத்தை முழுசாய் பார்த்த அனைவருக்கும் செல்வா வீடு வீடாய் சென்று, கையை பிடித்து நன்றி சொல்ல வேண்டும்."

"இந்த இரண்டாம் உலகம் படத்தை கண்டிப்பாக திரையில் பாருங்கள்... (யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்)... (சாவுங்கடா...)"

"இரண்டாம் உலகம் என்று பெயர் வைத்தற்கு பதில் அம்மா உலகம் என்று பெயர் வைத்து இருக்கலாம்... படத்தை பார்த்தா உங்களுக்கே தெரியும்..."

"ஒரு மோசமான ஃபேண்டஸி படத்தினை கொடுத்து தமிழில் ஃபேண்டஸி படங்களுக்கு கனகச்சிதமாக ஒரு முட்டுக்கட்டையை போட்டுவிட்டார் செல்வராகவன்...!

"பாஸ்...   யாராச்சும் இந்த மாதிரி ஆளுங்க கிட்டேயிருந்தெல்லாம் தமிழ் சினிமாவ காப்பாத்துங்க பாஸ்....!"

"இரண்டாம் உலகம் - உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ சாமிய்ய்ய்ய்......."
 


Made with .freeonlinephotoeditor.com
 

"காசு கொடுத்து படம் பார்த்த ஒரு சாதாரண பாமர ரசிகனாக கேட்கிறேன்.. இந்தப் படத்தின் கதை என்ன ஸார்..? உங்களுக்கு மட்டுமே கதை புரிஞ்சா.. தெரிஞ்சா.. போதுமா..? எங்களுக்குப் படம் புரிஞ்சாத்தானே நாங்க வெளில போய் நாலு பேர்கிட்ட இதைப் பத்திச் சொல்ல முடியும்..! ஒண்ணுமே புரியலைன்னா நாங்க என்ன சொல்றது..?

இவியிங்களாவது பரவாயில்லை.......பாவம் பிழைத்துப் போகட்டும் பரிதி...னு ஒரு பதிவரு இரண்டாம் உலகம்-படம் எப்படியிருக்கு...?   என்று ஒரு கருத்துக்கணிப்பு வச்சிருக்கிறாரு....

இரண்டாம் உலகம் படம் எப்படியிருக்கு....?


வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.......முடிவு-29/11/2013   

ம்..அதில மொக்கைதான் முன்னோடியாய் இருக்கு..அப்பப்ப யாரோ புண்ணியவாங்க சூப்பரு...அப்பு...சூப்பருனு ஒட்டுப்போடுராயிங்க....
இங்கேயும் கொஞ்சம் நமக்கு சாதகமா விமர்சனம் எழுதுற பதிவர்க இருக்கிராயிங்கப்பா...ஹி..ஹி..  

கோவை ஆவி என்ன சொல்லுராருனா...

"செல்வராகவனின் மிக மெச்சூர்டான ஒரு படைப்பாய் இதைப் பார்க்கிறேன். ஓரிரு வசனங்கள், காட்சியமைப்புகள் குறைபாடுகளைத் தவிர ஒரு நல்ல தெளிவான திரைக்கதை......இரண்டாம் உலகம் கொஞ்சம் பொறுமையாய் இம்மை மறுமையில் நம்பிக்கையோடு நிதானமாக பார்க்க வேண்டிய படம்.

irandamulagam

 
அப்புறம் பாருங்கையா...ஆங்கில வலைத்தள (rediff) த்தில் விமர்சகரி எஸ்.சரஸ்வதி எழுதுறாங்க.....
"மனிதர்கள் புரிந்துகொள்ள முடியாத காலத்தையும் விண்வெளியும் கடந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒரு கற்பனை உலகத்தில் நடக்கும் காதலை விவரிக்கும் அதிர்ச்சியூட்டும் ஆச்சரியமான கற்பனைக் கதை..." 

இதுக்கு மேல என்னப்பா வேணும்...என்ன இரண்டாம் உலகம் குப்பை ராஜா மாதிரி பேசுறேன்னு பார்க்கிறீங்களா...?
அதுல பாருங்க...இரண்டாம் உலகத்தில் உள்ள ஆர்யா-அனுஷ்கா தவிர
அம்புட்டு பேரும் வெள்ளைக்காரனுங்க..அவியிங்களுக்கு நம்ம சென்னை செம்மொழியை சொல்லிக்கொடுத்து பேச வைக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டுயிருப்பேன்

http://www.southstarz.com/wp-content/uploads/2013/08/Irandam-Ulagam-Movie-Stills-Photos-2.jpg  
ஒருத்தரு (desimartini) எழுதுறாரு......என் வசனத்த வச்சே எனக்கு ஆப்பு வைக்கிறாராம்......படத்தில வர்ணா (அனுஷ்கா-2) சொல்லும் வசனம்...நான் சுதந்திரப் பறவை யாருக்கும் அடிமை இல்லை என்கிறத அப்படியே உல்டா பண்ணி பேசுறாரு....இரண்டாம் உலகம் என்ற காதல் கற்பனைப் பறவையை உணர்சிகரமாக சொல்கிறேன் என்று அதன் ஒவ்வொரு சிறகுகளாக பிடுங்கி...இந்த கவர்சிகரமான காதல் பறவையை செல்வராகவன் கொல்லக் காரணம்...? என்று கேட்டு என்னைக் சினிமா கலையை  சீரழிக்கும் கொலைகாரன் என்று சொல்லாமல் சொல்லுகிறார் 


ஆனா அதையெல்லாம் புரிஞ்சிக்கிட்டவரு நம்ம oneindia விமர்சகர் ராம சந்தர் அண்ணன்தான் அழகா எழுதியிருக்கிறார்...அருமையா சொல்லியிருக்கிறார்
"இரண்டாம் உலகம்- உலக சினிமா தொழில்நுட்ப திறமைக்கு முழு மதிப்பெண்கள் கிடைக்கின்றது இப்படம் புரிந்துகொள்ள முடியாத ஆழ்ந்த சிந்தனையின் தாக்கம் தவிர பொழுது போக்கு சித்திரமல்ல.........நீங்கள் முதலில் சொன்னதை விரும்புபவராக இருந்தால் இப்படத்தை தவற விடக்கூடாது....."


                                        thanks-YouTube-by IndiaGlitz

  ஒருபக்கம் இவியிங்க இப்படிச் சொன்னா....இன்னொரு பக்கம் ட்விட்டர் அண்ணன்மார்கள் ............

ஐந்தருவி a.krishnan @ayntharuvi 
தமிழை எல்லா உலகங்களிலும் பேச வைத்த செல்வராகவனுக்கு நன்றிகள் # இரண்டாம் உலகம

sethuraman@sethura95811597 
இரண்டாம் உலகம்னுட்டு ஆரம்பிச்சாலே வெறிபிடிச்சு அடிக்கவராங்கப்பா!#என்ன கொடும சார் இது?

அதிஷா© வெடி!@athisha 
இரண்டாம் உலகம் சூப்பர் பென்டாஸ்டிக்குனு திடீர்னு நிறையபேர் சொல்றாங்க.. என்ன சார் நடக்குது இந்த நாட்லே!

 Sujan Ram Purushoth@kaatupoochii 
மக்கள் எப்பொழுது ஆரோக்கியமான திரைபடத்தை வரவேற்க போகிறார்கள் என்று தெரியவில்லை - #இரண்டாம்உலகம

உங்களுள் ஒருவன் @emmanda007 
பழைய ஆங்கில படத்தை தமிழில் டப்ப செய்து வேளியிட்டது போல் ஒரு உணர்வு,... இரண்டாம் உலகம். Foreign junior artist effect , biggest minus point


சங்கர்தயா@Shankarthaya 
அய்யோ என் 120 ரூபாய் போச்சே... இரண்டாமஉலகம் கொடுமை டா சாமி. தியேட்டர்ல ரெண்டு பேரு கெட்ட வார்த்தைல திட்டிட்டு பாதிலயே போய்ட்டாங்க.

நா மன்மதன் இல்லீங்கோ@seenisaha 
இரண்டாமஉலகம் மாதிரி ஒரு மொக்க படத்த லாம் பார்க்க வேண்டியா நிலைமை ஆச்சியே ட்ரைலரா காட்டி ஏமாத்திதானுங்க

கானா பிரபா@kanapraba 
இரண்டாமஉலகம் நல்லா இல்லை என்று நேற்று வரிசையாக விமர்சனங்கள் இன்று நல்லா இருக்குன்னு வந்து கொண்டிருக்கு அடாங்

http://reviews.in.88db.com/images/irandam-ulagam-latest/Irandam-Ulagam-movie-latest-pics.jpg

அதனால்சினிமா உலக ரசிகர்களே........
இதிலிருந்து தெரிவது என்னவென்றால்...தமிழ் சினிமா வுலகத்தைப் போல் இந்த சினிமா ரசிகர்களும் அதீத குழப்பத்தில் கிடக்கின்றார்கள் 
ஆதலால்.....முதலில் படம் பார்த்து குழம்பிப் போனவர்கள் மீண்டும் ஒருமுறை வந்து படம் பாருங்கள் உங்கள் குழப்பம் தீர்ந்துவிடும்

அப்படியும் தீரவில்லையா...? மீண்டும் ...மீண்டும் பாருங்கள் நிச்சயமாக உங்கள் மனக்குழப்பம் தீர்ந்துவிடும் நம்ம சூப்பர் ஸ்டார் சொன்னமாதிரி...இத ஒரு தடவ பார்த்தா ஒன்னும் புரியாது...நூறுதடவ பாரு நல்லாப் புரியும்....

ஏன்னா...? இந்தப் படத்தில நான் காட்டியிருக்கிற காதல்...நம்ம உலகநாயகர் குனாவுல சொல்றமாதிரி மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல....புனிதமானது 
அதனால மக்கா....எல்லோரும் இரண்டாம் உலகம் படத்தப் பார்க்கத் தவறாதீங்க 

வாழ்க சினிமா நாமம் ........... வளர்க கற்பனை கனவு உலகம்.....வருது வருது மூன்றாம் உலகம் வருது அப்போதும் இது போல் உங்கள் ஆதரவை தந்து வாழ்த்துங்கள் ... விடைபெறுகின்றேன் நன்றி








செல்வராகவன் அண்ணேன்..அவிங்க கிடக்கிறாயிங்க நீங்க ஏதோ மாத்தியோசி என்பாயிங்களே அப்படி இப்படி (ஏ)மாத்தி யோசிச்சிருக்கிறீங்க.....

(உ.ம்.)அம்மா சாமி ..பொதுவா பெண் சாமினா பெரிய குங்குமப்பொட்டு ...அகன்ற முகம் ...காற்றில் பறக்கும் கூந்தல்...40 வயதுக்கு மேல் என்றுதான் இருப்பார்கள்....ஆனால் உங்க இரண்டாம் உலகத்தில்  அழகான குட்டியை சாமின்னு...அம்மான்னு...அப்புறம் ஆளாளுக்கு கையில தூக்கிக்கிட்டு கில்மா சாமியாட்டம்
 

அதுதான் அண்ணேன் என்னால ஜீரணிக்க முடியல...கண்ணுக்குள்ளே நிக்குது ஆனால் ...பொதுவா ஒரு படத்தைப் பார்த்தால் ஓன்று இரண்டு நாட்களில் அதன் தாக்கம் மறைந்துவிடும்...கொஞ்ச பேர் பேசுவார்கள் ஆனால்..இரண்டாம் உலகம் பற்றிய பேச்சும் தாக்கமும் அவ்வளவு எளிதில் தீராது..அண்ணேன்...அங்கேதான் உங்களுக்கு  வெற்றி... அடுத்து மூன்றாம் உலகம் எடுக்கும் போது சொல்லியனுப்புங்க... அல்லனா உங்க இரண்டாம் உலகத்தில நீங்க ஏதும் பிளாட் போட்டு விற்றாலும் சொல்லுங்க.....எனக்கு அஞ்சு பிளாட் பார்சல்          



(யோவ்...பதிவரே பேண்டஸி படம்  மாதிரிதான் உன் பேண்டஸி பதிவும் இருக்கு எதுவும் புரியமாட்டேங்குது...? என்று  நீங்க கல்லெடுத்துகிட்டு  வருவது இரண்டாம் உலகத்து  அம்மா சாமிஎன் காதுல சொல்லுது..... ஆயினும் வார்த்தைகளை கடன்கொடுத்த டிவிட்டர்கள்,பதிவர்கள், வலைத்தளங்கள் அனைவருக்கும் நன்றி............) 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1