google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரம்மி-விஜய் சேதுபதியின் பொய்யாட்டமா?

Tuesday, February 04, 2014

ரம்மி-விஜய் சேதுபதியின் பொய்யாட்டமா?

நடிகர்களுக்காகத்தான் சினிமா நாங்கள் எப்படி வேண்டுமானாலும் நடிப்போம் நீ காசுகொடுத்து பார்..இல்லனா மூடிக்கிட்டு போ என்று தனக்கென்று சில விசிலடிச்சான் குஞ்சிகளை ரசிகர்களாக வைத்துக்கொண்டு படம்காட்டி பிழைக்கும் கோலிவுட் சினிமா  நட்சத்திர நடிகர்கள் மத்தியில்...........

கதைக்காகத்தான் நடிகர் என்று நடுவில கொஞ்சம் பக்கத்தக் காணோம்,பிட்சா,சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? என்று தொடர் வெற்றியாக கொடுத்த விஜய் சேதுபதி  நடித்த  ரம்மி திரைப்படம் அரங்கு நிறைந்த கூட்டம் அத்தனையும் அவரிடம் ஒரு புதுமையை எதிர்பார்த்து அவரது அபிமான ரசிகர்கள் ஆனால்....

ரம்மி திரைப்படத்தில் அவருக்கு கிடைத்த காதாப்பாத்திரம் அவரிடம் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் எதுவும் இல்லாமல் போனது.... ரம்மியில் விஜய் சேதுபதியின் வேடம்... அரைவேக்காடுத்தனமானது
நட்புக்காக  நண்பனாக நடித்ததாக சொல்லும் விஜய் சேதுபதியை விஷமத்தனமாக சினிமா வியாபாரிகள் முன்னிலைப்படுத்தி காசு பார்த்துவிட்டார்கள்

இது போன்ற படங்களில் நடிப்பது அவரது இனி வரும் அவரது படங்களின் எதிர்பார்ப்பை குறைக்கும் என்று சொல்லுகின்றனர் அனைத்து விமர்சகர்களும் அது உண்மையா..........?  
ரம்மியில் விஜய் சேதுபதி ரசிகர்களை ஏமாற்றிவிட்டாரா...?


விஜய் சேதுபதியை தூண்டில் புழுவாக மாட்டி...
விஜய் சேதுபதி நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கின்றார் என்று நினைத்து போகும் ரசிகன் ஏமாற்றப்பட்டு  திரையரங்கில் தூண்டிலில் மாட்டிய புழுவாக துடிக்கின்றான் என்று முணுமுணுக்கும் விமர்சகர்கள்..........

இரண்டு தலைமுறைக்கு முன்பு உள்ள கதை அதை சொன்ன விதம் அதைவிட ரொம்ப பழமையானது ரம்மி மோசமான படம் அல்ல ஆனால் அது உங்களுக்கு எந்த வித தாக்கமும் தராது....என்று  2.25 ரேட்டிங் கொடுத்து கரைகின்றது MOVIE CROW வலைதளம்

ரம்மி  படத்தின் மிகப்பெரிய பின்னடைவு அதன் தொய்வும் வேகமின்மையும் ஆகும் இது போன்ற படங்களை பார்வையாளர்கள் இதற்கு முன்பு நிறைய பார்த்திருப்பதால் அவர்களுக்கு எதுவும் புதுசாக தெரியவில்லை சுவாரசியம் இன்றியே அமர்ந்து இருந்தார்கள்...என்று 2.0/5 ரேட்டிங் கொடுத்து BEHINDWOOD வலைதளம் பிதற்றுகின்றது.

மிகச்  சாதாரணமான எந்த புதுமையும் இல்லாத முதல் பாதி..ஏதோ கொஞ்சம் பரவாயில்லை என்ற இரண்டாம் பாதிக்காக ஒரு முறை படம் பார்க்கலாம் என்று சொல்கின்றது ONLY KOLLYWOOD வலைதளம்

DESIMARTINI வலைதளத்தின் விமர்சனத்தை படித்தால் ரம்மி படத்தில் சூரியின் காமெடியைவிட சிரிப்பூட்டுகின்றது...........
தெற்கு தமிழ் நாட்டில் பெரிய மீசைவைத்த ஒரு கிராமத்து கிழட்டு மனிதன் அவர் வாழும் ஊரில் உள்ள பெண்களைக் காதலிக்கும் வாலிபர்களை வேலைவெட்டி இல்லாமல் வாரத்தில் ஆறு நாட்கள் ஒருமுறையும் ஞாயிறு அன்று இரண்டு முறையும்  என்று அடித்து துவைக்கும் வேலையாக காட்டப்பட்டுள்ளது என்று 2.4/5 ரேட்டிங் கொடுத்து எள்ளி நகையாடுகிறது 

இதிலிருந்து  நமக்கு தெரிவது ஆகப் பழைய கதையை அப்படியே தூசு தட்டாமல் கொடுத்து படம் பார்ப்பவர்களை பழம் புழுதியில் மூச்சடைக்க செய்த இயக்குனர்தான் இதற்கு முழுக் காரணம்  ஆனாலும் அங்கே இங்கே ஒட்டுப்போட்டு படம் காட்டுபவர்களைவிட ரம்மி எவ்வளவோ பரவாயில்லை



 


















நாற வாயன்....@murugan_vadivel 
இதே மாரி போனாப்டின்னா விஜய் சேதுபதி அடுத்த அப்பாஸ் ஆகிடுவாப்ள.......சூதானமா இருங்க பாசு..... #ரம்மி

கூத்தாடி@Koothaadi 
வேண்டா வெறுப்புக்கு புள்ள பெத்து காண்டம் பெலியர்ன்ன்னு பேர் வெச்சானாம். #ரம்மி ரிவ்யூ

உளவாளி @withkaran 
மொத்தத்தில் ரம்மி..ஒரு கவுத்திப்போட்ட அம்மி...

Akshay@AkshaySharon 
நாலு படம் நடித்தவுடன் நரேந்திற மோடியன் தம்பி போல ரசிகர் பட்டாளத்தை சேர்த்து கொண்டவரின் ரம்மி இன்று வெளி வந்து டம்மி ஆகியுள்ளது

மன்னவன்@PandianKarthik 
எத்தன நாளைக்குத்தான் காதலிச்சவங்கள கொல்லுவிங்க,இனி தொடுவிங்க?#ரம்மி

கும்பமுனி @sArAvAnA_15 
கிளைமாக்ஸ்ல சூரி வந்து வில்லன கொளுத்த சொல்லுவாப்ல,..அது வில்லன இல்ல ஸ்கிரீனன்னு இப்ப தான் புரியுது..ரம்மி குறியீடுகள்

bRITTO @beingBritz 
பழக்கத்துக்காக பழக்கத்துக்காகன்னு இப்புடி பண்ணிடீங்களே விஜய் சேதுபதி #இ ம அ போ #ராவு ராவென ராவிய ரம்மி


இப்படி ரம்மி திரைப்படம் விஜய் சேதுபதியை டம்மி ஆக்கியது அடுத்து வரும் பண்ணையாரும் பத்மினியும் படம் எப்படி இருக்கும்? என்று நினைக்க வைக்கின்றது ஆனாலும்.....ரம்மியில் பொய்யாட்டம் ஆடியது விஜய் சேதுபதி இல்லை என்பதை அனைவரும் அறிவர்

நம்ம  கோலிவுட் நட்சத்திர நடிகர்கள் நடித்து சமீபத்தில் வந்த படங்களை விட ரம்மி நல்லாத்தான் இருக்கு என்று சொல்லும் நடுநிலை பார்வையாளர்கள் அதிகம்





































எனவே விரைவில் வரும் விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும் நம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்...........



நயன்தாராவின் பரமரகசியம்.................



கோலிவுட் திரையுலகை நீண்ட ஆண்டுகளாக தங்கள் கவர்ச்சியால்  கலக்கிக் கொண்டிருக்கும் கனவுக்கன்னிகள்  நயன்-திரிஷ் இருண்டு பெரும் நெருங்கிய தோழிகள்.........ரகசியமாக அவர்கள் சந்தித்து உரையாடுவார்கள் என்பது பரமரகசியம்


(யோவ்......பதிவரே! 
இதுல என்னய்யா பரமரகசியம் இருக்கு 
நானும் என்னவோ ஏதோனு படிச்சா இப்படி ஏமாற்றிப் புட்டியே...அவ்வ்வ அதாவது பரவாயில்ல உமக்கு என்னய்யா டேஸ்ட்...அவிக மூஞ்சப் பார்த்தா முதிர்கன்னிகள் மாதிரி இருக்கு.....?. )

*********************************************************************

வேறவழியே இல்லை.............
நாளைக்கு உங்களுக்கு சிறப்பு பதிவு...............





இங்க என்ன சொல்லுது-சினிமா விமர்சனம் 

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1