ஒரு வாரஇதழ் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கருத்துக்கணிப்பு நடத்தி பட்டம் கொடுக்க...... ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களும் தல அஜித் ரசிகர்களும் சமுக வலைதளங்களில் யுத்தம் நடத்திக் கொண்டிருக்க....
அது.........சமுதாயத்தில் அவ்வப்போது சர்ச்சை உருவாக்கும் வார இதழ் என்ற பெயர் பெற்றது ..
ஒருமுறை அன்று பின்தங்கி இருந்து இன்று முன்னேறி உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினரை ஒரு உயர்சாதி எழுத்தாளரை வைத்து கீழ்த்தரமாக தொடர்கதை எழுத...அந்தச் சாதியினர் அப்பத்திரிகை அலுவலகம் முன்பு போராட்டம் செய்ய .....பாதியில் நின்று போனது அந்த தொடர்.
சமிபத்தில்கூட ஒரு பிரபல நடிகையை அவர் சார்ந்த கட்சி தலைவருடன் இணைத்து இன்னொரு மணியம்மை என்று தரக்குறைவாக எழுதி.....கட்சி தொண்டர்கள் போராட்டம்,முற்றுகை செய்ய மன்னிப்பு கேட்டது அந்த வார இதழ் குழுமத்தை சார்ந்த பத்திரிகை.....
இப்போது சும்மா கிடக்கும் சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்றக் கணக்கில் சும்மாவே வலைதளங்களில் சேற்றை அள்ளித் தெளிக்கும் அஜித்-விஜய் ரசிகர்களுக்குள் தீமூட்டி விட்டுள்ளது அது நடத்திய அடுத்த சூப்பர் ஸ்டார் கருத்துக்கணிப்பு
உண்மையில் அஜித்-க்கே ஆதரவு என்றும் அந்த வார இதழ் பணத்திற்காக விஜய்-க்கு அந்தப் பட்டம் கொடுத்ததாகவும் சமுக வலைதளங்களில் கொந்தளிக்கும் அஜித் ரசிகர்கள் இன்று பல குழுக்களாக கூடி சமுதாயத்தில் சச்சரவு ஏற்படுத்திய அந்த வார இதழ் மீது சட்டப்படி கோர்ட் நடவடிக்கை எடுக்க உள்ளதாக முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதளங்களில் செய்தி தீயாக எரிகிறது
இது போன்ற சமூகப் பிரச்சனை ஏற்படுத்தும் அந்தவார இதழை அரசே நடவடிக்கை எடுத்து சமுக நலன் கருதி தடை செய்ய வேண்டும் என்று பலமான எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்திலும் கிசு கிசுக்கப்படுகிறது
விஜய்-யா அடுத்த சூப்பர் ஸ்டார்? என்று கேட்கும் அஜித் ரசிகர்கள் உண்மையில் கோர்ட்டுக்கு போவார்களா .........? என்பது இன்னும் சில நாளில் தெரியும்
நண்பர்களே! உங்கள் பார்வையில்......இது போன்ற சமுக பயனற்ற கருத்துக்கணிப்பு நடத்திய அந்த வார இதழ் மீது சட்ட நடவடிக்கை தேவையா?
online survey
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |