பின்னாடி நடக்கப் போவதை முன்னாடியே தெரிந்து கொள்ளும் அசாதரண சக்தி படைத்த கார்த்திக் (கெளதம் கார்த்திக்) தன் ஆபீஸ் நண்பர் பாண்டா (விவேக்) வுடன் சேர்ந்து கொக்கி குமார் (தனுஷ்) கையாள் ராண்டு (டேனியல் பாலாஜி) விடம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஒரு கோடி அடிச்சிட்டு வருறாயிங்க.......
அந்தப் பணத்தில் ஜாலியாய் கோவா-க்கு போக அங்கே வரும் ராண்டு கார்த்திக்கின் காதலி பிரியா (பிரியா ஆனந்த்) வைக் கடத்தி அவனை மிரட்டி ஒரு சொகுசு கப்பலில் நடக்கும் கேசினோவில் சூதாட வைக்கிறார்கள்
அந்த கேசினோவில் கார்த்திக் ராண்டுவை தந்திரமாக மாட்டிவிட்டதால், கூட்டாளி ஸ்ரேயா (டாப்சி) மூலம் தப்பி வரும் ராண்டு கார்த்திக்கை கடத்திச் சென்று கொல்ல முயலும் போது கொக்கி குமார் தோன்றி கார்த்திக்கை காப்பாற்றி........
இப்ப MLA வாக இருக்கும் கொக்கி குமாரு தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்காக கெளதமை பயன்படுத்த அழைத்துச் செல்கிறார்
விரைவில் கொக்கி குமார்- னு ஒரு படம் கோலிவுட்டில் இதே கூட்டணியில் வரலாம்
இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ்......ஒரு சாதாரனமான கதையை காமெடி கலந்து அனைவரும் ரசிக்கும் படி பிரமாண்டமாக படைத்துள்ளார் கொக்கி குமாராக தனுஷை 5 நிமிடங்களே நடிக்கவைத்து வை ராஜா வை படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளார்
காதலுக்கு பிரியா ஆனந்த்,கவர்ச்சிக்கு டாப்சி,காமெடிக்கு விவேக்,மனோபாலா,எம்.எஸ்.பாஸ்கர்...என்று அனைவரும் பட்டையக் கிளப்ப கெளதம் கார்த்திக்கும் வித்தியாசமான தோன்றி நடித்துள்ளார்
படம் வெளியாகி 5 நாட்களுக்குப் பிறகும் இளைஞர்கள்-இளைஞ்சியர்களால் அரங்கம் நிறைந்த கூட்டம் வை ராஜா வை படத்தின் வெற்றியை சொல்கிறது அதேநேரம் பக்கத்து அரங்கில் உத்தம வில்லன்....என்னத்த சொல்றது?
சினிமாவும் ஒரு சூதாட்டம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது
ஆக மொத்தத்தில்..........
இரண்டு மணிநேரத்தில் வெள்ளித்திரையில் ஒரு சாதாரனமான கிரிக்கெட் சூதாட்டம் ஒரு பிரமாண்டமான கேஸினோ சூதாட்டம் என்று படம்பார்ப்பவர்களை ஒரு மாய உலகத்தில்................வை ராஜா வை
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |