நாடகக்கலை அழிஞ்சி போச்சுன்னு யார் சொன்னது....? இப்போதெல்லாம் நாடகம் சினிமாவில் உயிர் வாழ்கிறது
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்........அப்படி ஒரு நாடகச் சினிமா
நான்கு நண்பர்களுடன் ஒரே அறையில் தங்கி ஐ.டி கம்பெனியில வேலை செய்யும் ஹீரோவுக்கு 3 வருஷமாக கல்லூரி மாணவி ஹீரோயின் மீது பஸ் ஸ்டாப்ல லுக் விடும் காதல்
ஹீரோயினுக்கும் ஹீரோ மீது கண்ணாலே காதல் ஆனால் இரண்டு பேரும் காதலை பரிமாறிக்கொள்ளவில்லை
ஹீரோயினுக்கு திடீர் கல்யாணம் நிறைய கடன் வாங்கியுள்ள புது மாப்பிள்ளை பயத்தில் தற்கொலை செய்து கொள்ள.......
ஹீரோ மறுபடியும் தன் காதலி விதவை ஹீரோயினை ஒரு விளங்காத ட்விஸ்ட் உடன் கல்யாணம் செய்து கொள்கிறார் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பாடா
கதைக்களம் மதுரை......காதலாக இருந்தாலும் அது வெட்டு,குத்து,அடி,தடி படமாகவே இதுவரை பார்த்த நமக்கு ஒரு சின்ன சண்டைகூட இல்லாமல் புதுமையா படம் காட்டுராராம் இயக்குனர்......ஆங்
ஆக மொத்தத்தில்.........
இப்பலாம் சினிமாவிலேயே நாடகம் போடுறாயிங்க.......ஒன்னுமே புரியல ஆனந்தமும் இல்ல 50 வருஷத்துக்கு முன்னாடி வரவேண்டிய சினிமா அடங்கொய்யால புதிதாக ஆரம்பமாம்
.....புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |