google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: September 2012

Sunday, September 30, 2012

சாதி நெருப்பை சுட்டவன்



பாரதி-
இவன்
வார்த்தைகளால்...

வானவில்லை
வரைந்தவன்.

நட்சத்திரங்களை
மாலை கோர்த்தவன்.

இவன்
பாடல்களால்...

உண்மையின்
உதயத்திற்கு
உத்தரவிட்டவன்.

அடக்குமுறை  
அஸ்தமிக்க
ஆணையிட்டவன். 

இவன்
பார்வை பட்டு 
சாதி நெருப்பு  
காயம்பட்டு
கருகிப்போனது.

கவிதைகளால்.... 
மலர்களை
சிரிக்க வைத்த
மந்திரவாதி!
மனிதர்களை
சிந்திக்க வைத்த
தந்திரவாதி! 



                      Thanks-YouTube-Uploaded by  Arulan78


Friday, September 28, 2012

காதல் எச்சரிக்கை!-3




      ----கன்னியரின் கதிர்வீச்சு----

ஆண் மகனே!
ஆண்மையை தீண்டும்
விழிகளின் வலையில்
வீழ்ந்து விடாதே!

கண்ணியரின்
காதல் விழி வீச்சு
அணு உலையின்
கதிர் வீச்சை விட 
ஆபத்தானது.... 

பெண்ணாசையில்
மண்ணுக்குள் போன
மனிமகுடங்கள் நிறைய

கண்ணசைவில்
காணாமல் போன
கப்பல்கள் நிறைய 

இதழ் சிரிப்பில்
இல்லாமல் போன
இமயங்கள் நிறைய

அறிவுக் களஞ்சியத்தை  
அழித்து விடும்

உயர்வு பயணத்தை
தளர்த்தி விடும்
ஊதியத்தை
கரைத்து விடும்.

முதலில் காதல்
துள்ளி வரும்
ஜொள்ளு விட்டு
இளித்துக் கொண்டு..... 

முடிவில் காதல்
தள்ளி விடும் 
புதை குழியில்
இழுத்துச் சென்று.

ஊத்தக் காதலே
உலகமென்று
சொத்தையாகாதே!

உன் இதயத்தில்
நுழைந்தது  
காதலென்னும்
பட்டாம்பூச்சி அல்ல
பிணம் திண்ணும் கழுகு
முதலில் உன் தூக்கத்தை திண்ணும்
முடிவில் உன்னையே திண்ணும்
உயிரோடு திண்ணும்  

வாலிபத்தில் வரும்
பாலியல் காதல்
வாழ்வை
பாழடித்து விடும்

காதல் எச்சரிக்கை!
காதலர்களே!
பாலியல்
காதல் ஜாக்கிரதை!

(அடுத்து வருவது
ஒரு முறையற்ற காதல் கதை  
காதல் எச்சரிக்கை!............தொடரும்)
                       Thanks-YouTube-Uploaded by ste14ify



Thanks-Soundcloud Kanne Kalaimane(Sad) by ajaykarthik

காதல் எச்சரிக்கை!-2


      ----காளையரின் ஜாலங்கள்-----
பெண்ணே! கண்ணே!
மயிலே! குயிலே!

உன்னைப் போல்
ஓர் அழகி இல்லை!

காதலின் அரிச்சுவடி
ஆரம்பிப்பது இப்படித்தான்....

நீதான் என் உலகம்
நீயில்லை என்றால்
நான் இல்லை

காதல் குதிரை
இப்படித்தான் குதிக்கும்
எளிதில் புரியாது
என்னவென்று தெரியாது.

அகரம் தெரியாதவனும்
காதல் கொண்டால்
அம்பிகாபதி ஆகிடுவான்
அடுக்கு மொழியில்
பாயிரம் ஆயிரம் பாடுவான்  

ஆராதனை செய்வோரிடம்
அடங்கி விடாதே!

அவைகள்
உன்னை அழிப்பதற்கு
அடுக்கிய வார்த்தைகள்

போதை வார்த்தைகளில்
புதைந்து விடாதே!

சொடுக்கிய சாட்டையில்
சிக்கிக் கொள்ளாதே!

வேட்டை நாய்களுக்கும்
வீட்டு நாய்களாய்....

வாலை ஆட்டும்
காலைச் சுற்றும்
மயங்கி விடாதே!

வாலிபத்தில் வரும் 
பாலியல் காதல்
வாழ்வை
பாழடித்து விடும்

காதல் எச்சரிக்கை!
காதலர்களே!
பாலியல்
காதல் ஜாக்கிரதை!

(அடுத்து வருவது
கன்னியரின் கதிர்வீச்சு!
காதல் எச்சரிக்கை!.............................................................. தொடரும்)


                    Thanks-YouTube-Uploaded by AGRATAstream



Aval oru by Parithi Muthurasan

(Thanks-Top Picture-Wikipedia-An 1870 oil painting by Ford Madox Brown depicting Romeo and Juliet's famous balcony scene)

 

Thursday, September 27, 2012

செய்தியும் சிந்தனையும்



செய்தி-

அணு உலையை மூட‌க்கோ‌ரி இடிந்தகரை ம‌க்களுட‌ன் கடற்கரை மணலில் புதைந்து ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ நூதன முறை‌யி‌ல் போராட்டம் நடத்தினார்.

சிந்தனை -
போராட்ட வரலாற்றில் இவர் பெயரும் எழுதப்படும். 

******************************************************************************






செய்தி-
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அன்னிய முதலீடு ரத்தாகும்: நிதின்கட்காரி அறிவிப்பு

சிந்தனை-
அது என்ன அபச குணமாக வந்தால்?..அவர்களுக்கே நம்பிக்கை இல்லையோ?

*************************************************************


செய்தி-
மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சியினரை மதிப்பதே இல்லை. எந்த விஷயத்திலும் அவர்கள் எங்களை கலந்து ஆலோசிப்பது இல்லை.
 
சிந்தனை-
அம்மையாரே! நீங்கள்தான் அவ்வப்போது கூட்டணியை சட்டினியாக்கி
விடுகிறீர்களே!

*****************************************************************


செய்தி-
தேர்தல் கமிஷன் அதிரடி.தேர்தல் பிரசாரத்திற்கு விலங்குகளை பயன்படுத்தக்கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிந்தனை-
பிரச்சாரத்துக்கு நடிகர்கள் நடிகைகள்தானே இது வரை வந்தார்கள்.. 

*************************************



செய்தி-
தொலை தொடர்பு அலை‌கற்றை தவிர மற்ற இயற்கை வளங்களை ஏலம் விட வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சிந்தனை-
விட்டா  நாட்டையே ஏலம் விட்டு விடுவாங்கப்பா.

******************************************
 



செய்தி-
தாண்டவம் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி நாளை அந்தப் படம் வெளியாகிறது.

சிந்தனை-
இப்போதெல்லாம் படத்தை முதலில் கோர்ட்டில் வெளியிட்டு விட்டுதான் திரை அரங்குக்கு வருகிறார்கள்.நீதிபதியிடம் ஆசிர்வாதாமோ?நல்ல சகுனமோ? அல்லது  விளம்பர உத்தியா?



                                                    Thanks-YouTube- UTVMotionPictures





காதல் எச்சரிக்கை!-1



இது ஒரு நீளத் தொடர்

காதல் எச்சரிக்கை!

புதைகுழி இருக்குமிடத்தில்தான் 
எச்சரிக்கைப் பலகை இருக்கும்
அபாய இடங்களில்தான்
எச்சரிக்கைப் பலகை இருக்கும்
விபத்து நடக்குமிடத்தில்தான்
எச்சரிக்கைப் பலகை இருக்கும்

இது என்ன காதல் எச்சரிக்கை?

காதல் தெய்வீகமானது!
காதல் புனிதமானது!
காலம் காலமாக 
சொல்லப்படும் போது
இங்கு ஏன் வந்தது 
காதல் எச்சரிக்கை?

அன்று இருந்த காதல்
இன்று இங்கு இல்லை
உண்மையாக...

காதல் இன்று இங்கு
ஏதோ ஒன்றுக்கு
காரணியாக இருக்கிறது

ஆணுக்கு அது
ஆண்மையின்
பரிசோதனைக்கூடம்
காமத்தின் வடிகால்
கயமையின் இன்பத்துப் பால்

பெண்ணுக்கு அது
தொற்றிக் கொள்ளும்
கொழு கொம்பு
வாழ்க்கை பயத்தில்
தேடிக்கொள்ளும்
பாதுகாப்பு
பயணத்தின் வழித்துணை
இன்பப் பொழுது போக்கு
   
கண்டதையும் கேட்டதையும்
காதலைப் பற்றி எழுதுகிறேன்
நல்லக் காதலும் அடங்கும்
கள்ளக் காதலும் அடங்கும்

இது சொல்லும்
காதல் புரிந்துணர்வு
காதலிப்பவருக்கும்
காதலிக்கப் போவோருக்கும்
இது அபாய அறிவிப்பு! 

இது தொடரின் என்னுரை.
முன்னுரையும் கூட...    

காதல்-
கனவில் காண்பதற்கு
சுகமாய் இருக்கும்

கவிதையில் படிப்பதற்கு
தேனாய் சொட்டும்

கதைகளில் வாசிப்பதற்கு
களிப்பாய் இருக்கும்

திரையில் பார்ப்பதற்கு
திகட்டாமல் இனிக்கும்

திரைப் பாடல்களில்
பரவசம் ஊட்டும்

நிஜத்தில் மட்டும்
விஷமாய் இருக்கும்

இருபதில் இனிக்கும்
அறுபதில் கசக்கும்

யாருக்கு தெரியும்?
தீண்டியவருக்கே
நெருப்பு  
வெறுப்பாய் தெரியும்.  

பாம்பில் ஏது
நல்ல பாம்பு?
கெட்ட பாம்பு?

பாலியல் காதல்
வாழ்வை
பாழடித்து விடும்

காதல் எச்சரிக்கை!
காதலர்களே!
பாலியல்
காதல் ஜாக்கிரதை!

                          (தொடரும்)







                                           Thanks-YouTube-Uploaded by   vilva durai



Wednesday, September 26, 2012

அடிமையாய் இரு!



பிறக்க வைத்த
அன்னையின்
அன்புக்கு
அடிமையாய் இரு!

வாழ்வு கொடுத்த
தந்தைக்கு 
வாழும் நாளெல்லாம்
அடிமையாய் இரு!

அறியாமை
அகற்றி வைத்த
ஆசிரியருக்கு
அடிமையாய் இரு!



துடிக்கும் போது
துயர் துடைத்த
நட்புக்கு
அடிமையாய் இரு!

பெண்மையின்
உண்மையான
காதலுக்கு
அடிமையாய் இரு!

அமைதி தரும்
மரங்களுக்கு
உதவிடும்
அடிமையாய் இரு!

கவிதை பாடும்
காற்றுக்கு
களங்கம் செய்யாத
அடிமையாய் இரு!

தாகம் தீர்க்கும்
தண்ணீருக்கு
அசுத்தம் செய்யாத
அடிமையாய் இரு!

பசி தீர்க்கும்
நிலங்களுக்கு
பாதுகாக்கும்
அடிமையாய் இரு!
                         Thanks-YouTube-anifighter


போதைக் கவிதை கள்


(இது 
வண்ணக் கிளி மீது 
நான்  கொண்ட காதல்!)


உன்
செவ்விதழ்
சிந்திய
வார்த்தைகள்
வார்த்தைகள் அல்ல!

இதயத்தில்
யாகமின்றி பெய்த
மழைச் சாரல்!

உன்
கொஞ்சும் மொழிக்கு
தஞ்சம்
என் நெஞ்சம்!
இனி இல்லை
என் வாழ்வில்
பஞ்சம்!
அது
என்றும்
பாடும் ராகம்

த..ரி..கி...ட..த்...தோம்..தோம்
த..ரி..கி...ட..த்...தோம்.

பொங்கியதே
கவிதைகள்
தள்ளாட வைக்கும்  

போதைக் கவிதை கள்!

                     Thanks-YouTube-Uploaded by AGRATAstream

 

எங்கும் தமிழ்! பொங்கும் தமிழ்!




வீறு கொண்டு வாழ்ந்த இனம் தமிழரடா!-இன்று
வீதியிலே வேதனையில் அலையுதடா!
சீர் கொண்டு வாழ்ந்த இனம் தமிழரடா -இன்று
செங்குருதி சிந்தித்தான் அலையுதடா!

விதியென்று வாழ்வுதான் முடிந்திடுமோ?-செய்த
சதியிங்கு நெஞ்சை விட்டு மறைந்திடுமோ?
விதியொன்று செய்திடவே எழுந்தோமடா!-நல்
வழியொன்று கண்டிடவே வந்தோமடா!

நெருப்பிலிருந்தும் ஒரு பறவை பிறக்குமடா!-அதை
நினைக்கும்போது எமக்கு ஏது மரணமடா!
விலைபோகும் வீனர் வெற்றுக் கூட்டமடா!-அதை
களையெடுக்கும் நாம் வெற்றிக் கூட்டமடா!

விளை நிலங்கள் வறண்டு போகும் தாகமடா!-அது
பாலை நிலம் ஆகுமுன்னே தீருங்கடா!
சுரண்டித்தான் வாழ்ந்தது இங்கே போதுமடா!-இனி
சுரண்டத்தான் நாட்டில் ஏதும் இல்லையடா!

                       Thanks-YouTube-Uploaded by poovanthan




Tuesday, September 25, 2012

போதைக் கவிதைகள்-2



(இது
நிஜத்தின் மீது
நான் கொண்ட காதல்)

முகம் ஓன்று
பிரதிபலிக்கும்
பிம்பங்கள் இரண்டு.
அதெப்படி
உன்னால் மட்டும்?

நிஜம் ஓன்று
அதை மறைக்கும்
திரைகள் நூறு
அதெப்படி
உன்னால் மட்டும்?

இதயம் ஓன்று
அதனுள்
மறைந்திருக்கும்
மர்மங்கள் ஆயிரம்
அதெப்படி
உன்னால் மட்டும்?

உணர்வு ஓன்று
அதில்
ஒளிந்திருக்கும்
கனவுகள் லட்சம்
அதெப்படி
உன்னால் மட்டும்?

காதல் ஓன்று
அது செய்யும்
மாயங்கள் கோடி  

காயங்களோ
கோடானு கோடி

பொங்கியது
கவிதைகள்  

போதைக் கவிதைகள்   

அதெப்படி
உன்னால் மட்டும்?
                     Thanks-YouTube-Uploaded by AGRATAstream

 

சொன்னதும் சொல்லாததும்




சொன்னது-
நான் பிறரைப் போன்று பதவிக்காக வாழவில்லை. தமிழீழ விடுதலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக போராடுவேனே தவிர பதவிக்காக எப்போதும் உயிர் வாழ மாட்டேன் என்றார் வைகோ.
சொல்லாதது-
யாரும் பதவிதான் தரமாட்டேன் என்கிறார்கள்.கூட்டணியில் கூடவா சேர்க்கக்கூடாது?.  
****************************************
சொன்னது-
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் குழு கூட்டம் பிரதமரின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது.
சொல்லாதது-
எனவே எதிர்கட்சிகளும் ஒரு மனதாவோ இரு மனதாவோ ஆதரவு கொடுத்தால் நன்றாக இருக்கும்.
**************************************



சொன்னது-
அணு உலை எதிர்ப்பாளர்கள் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்புளி, பெருமணலில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கு திரண்டு சென்றனர். பின்பு அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள முன்னோர்களின் கல்லறைகளின் முன் நின்று  ஜெபம் செய்து தங்களின் கோரிக்கைகளை முறையிட்டனர்.

சொல்லாதது-
உயிரோடு இருக்கிறவங்க கிட்ட முறையிட்டால் பிரயோசனமில்லைனு முடிவுபன்னிட்டாங்களா?
***********************************


சொன்னது-
திமுக தலைவரான கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று திமுகவே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பித்திருக்கிறது.
சொல்லாதது-
இதைவிடப் பெரிய விருது இல்லையா?  உலக ரத்னா.....?



UA-32876358-1